'குளிர்ச்சியான தோட்டம்' ('Garden of Breezes) என்று அழைக்கப்படும் நசீம் பூங்கா, தால் ஏரியின் மேற்கு கரைகளில் அமைந்துள்ள முகல் தோட்டங்களில் முதன்மையானதாகும்.
முகலாயப் பேரரசர் அக்பரால் 1586-ம் ஆண்டு அவருடைய ஆட்சியில் இந்த தோட்டம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பின்னர், மற்றுமொரு முகலாய மன்னரான ஷா ஜகானால் இந்த தோட்டத்தில் சுமார் 1200 மரங்கள் நடப்பட்டன.
ஜீலம் நதிக்கரையில் அழகுற அமைந்திருக்கும் இந்த தோட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் படகு வீடுகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானவையாகும்.
இங்கு வரும் பார்வையாளர்களுக்கு முகாமிடும் வசதிகளும் செய்து தரப்படுகின்றன. இந்த இடத்தில் பாரம்பரியமிக்க காஷ்மீர கைவினைப் பொருட்கள் மற்றும் காய வைக்கப்பட்ட பழங்களையும் (Dry Fruits) வாங்கிட முடியும். வருடம் முழுவதும் வந்து செல்லும் இடமாகவும், குறிப்பாக ஏப்ரல் மற்றும் ஜுன் மாதங்களில் வரக்கூடிய இடமாகவும் நசீம் பூங்கா உள்ளது.



Click it and Unblock the Notifications