சிருங்கேரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு கோயில் இதுவாகும். வித்யாஷங்கருக்காக எழுப்ப பட்டுள்ள இந்த கோயில் விஜயநகர சாம்ராஜ்ய குருவாக விளங்கிய வித்யாரண்யர் என்பவரால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
திராவிட, சாளுக்கிய மற்றும் தென்னிந்திய, விஜயநகர கட்டிடக்கலை முறையில் இது கட்டப்பட்டுள்ளது. விஜயநகர மன்னர்களின் பங்களிப்பை கூறும் பல கல்வெட்டுகளையும் இங்கு காணமுடிகிறது. செவ்வக வடிவில் அமைந்துள்ள இந்த கோயிலில் 12 கிரகத்தூண்களும் அமைக்கபட்டுள்ளன.
கர்ப்பக்கிருகத்தில் துர்கா மற்றும் வித்யா கணேஷ் சிலைகளுடன் பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன், போன்ற தெய்வங்களின் சிலைகளும் தரிசிக்க கிடைக்கின்றன. கோயிலின் மைய விதானமும் அதன் வடிவமைப்பும் அக்காலத்திய கட்டிடக்கலையின் மகோன்னதத்துக்கு சான்றாய் விளங்குகிறது.
மேலும் இக்கோயிலில் சில இடங்களில் சாய்வாய் கற்பலகை கூரையும்கூட காணப்படுகின்றன.கோயில் அடித்தளத்தில் சிவன், விஷ்ணு, தசாவதார உருவங்கள், காளி போன்ற சிலைகளுடன் விதவிதமான விலங்குகளின் சிலைகளும் காணப்படுகின்றன.
கார்த்திகை சுக்ல பட்சத்தில் வித்யாதீர்த்த ரஹோத்சவம் எனும் திருவிழா இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.