கேரே தொன்னூர் எனும் இடமும் பயணிகள் பார்க்க வேண்டிய இடமாகும். இது ஷீரங்கப்பட்டணத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கிராமமாகும். உயரமான மரங்களுக்கிடையில் அமைந்திருக்கும் ஏரிக்காக இந்த கிராமம் பிரசித்தமாக அறியப்படுகிறது.
மோத்தி தலாப் என்று திப்பு சுல்தானால் அழைக்கப்பட்ட இந்த ஏரி தற்சமயம் ‘ப்ளூ லகூன்’ என்று அழைக்கப்படுகிறது. பயணிகள் இந்த ஏரியில் நீச்சல், தெப்பப்படகு சவாரி போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.
இதர சுற்றுலா அம்சங்களாக சோழர்காலத்தில் கட்டப்பட்ட சில கோயில்களும் இந்த கேரே என்னும் கிராமத்தில் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications