கொடகு மன்னரான தொட்ட ராஜ வீரேந்திராவால் 1792 - 1794 ம் ஆண்டுகளில் இந்த நலக்நாட் அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இது தடியண்டமோல் சிகரத்தின் அடிவாரத்தில் யவகபாடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த கிராமம் கர்நாடகாவில் கொடகு மாவட்டத்தில் உள்ளது. ஒரு வேட்டை மாளிகையாக கட்டப்பட்டு பின்னர் கொடகு நாட்டின் கடைசி மன்னரான சிக்க வீர ராஜேந்திராவின் பாதுகாப்பு மாளிகையாகவும் இது பயன்பட்டிருக்கிறது.இந்த வரலாற்றுச்சின்னம் ‘நால்கு நாடு அரமணே’ என்ற பெயரிலும் அறியப்படுகிறது. நான்கு கிராமங்களின் அரண்மனை என்பது இதன் பொருளாகும். இரண்டு தளங்களுடன் கேரள பாணியில் ஓட்டுக்கூரை அமைப்புடன் பாரம்பரியத் தோற்றத்துடன் இந்த அரண்மனை காட்சியளிக்கின்றது.
இதனுள் அமைந்துள்ள 12 தூண்களில் கலையம்ச வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. மலை ஏறிகள் இந்த அரண்மனையில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இது தற்சமயம் கர்நாடக மாநில தொல்லியல் அருங்காட்சியகத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
நேரம் இருப்பின் தடியண்டமோல் மலைஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் இந்த அரண்மனையையும் பார்க்கலாம்.