கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்திலேயே மிக உயரமான சிகரம் இந்த தடியாண்டமோல் சிகரமாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் 5724 அடி உயரத்தில் இந்த சிகரம் அமைந்துள்ளது.
இது மலை ஏறிகள் மற்றும் இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது. மேலும் இது கர்நாடக மாநிலத்திலேயே மூன்றாவது உயரமான மலைச்சிகரமாகவும் உள்ளது. தடியண்டமோல் எனும் இந்த பெயருக்கு உயரமான அகலமான மலை என்பது பொருளாகும்.
இந்த சிகரத்தில் உள்ள நலக்நாட் கோட்டை ஆங்கிலேயர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ‘திரிகோண பூகோள அளவைத்திட்ட’த்தில் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.
தடியண்டமோல் சிகரத்தில் சோலைக்காடுகள் அல்லது வெப்பப்பிரதேச ஈரக்காடுகள் நிறைந்து கண்ணுக்கினிய காட்சிகளை பயணிகளுக்கு அளிக்கின்றன. தடியண்டமோல் சிகரத்தின் இயற்கை வனப்பை கண்டு ரசிக்க பயணிகள் அவசியம் இங்கு விஜயம் செய்யலாம்.