மணிப்பூரிலேயே மிகவும் அதிகமான அளவு ஆரஞ்சுகளை உற்பத்தி செய்யும் இடமாக தெமங்லாங் உள்ளது. இதனை ஒரு நல்ல காரணமாகப் பயன்படுத்தி வியாபரம் மற்றும் சுற்றுலாவினை முன்னேற்றுவதற்காக ஒவ்வொரு வருடமும் தெமங்லாங்கில் ஆரஞ்சு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் இந்த திருவிழாவிற்கு இம்மாவட்ட மக்கள் மட்டுமின்றி, இம்மாநிலம் மற்றும் பிற பிரதேசங்களிலிருந்தும் மக்கள் வந்து குவிவது வழக்கம்.
இம்மாவட்டத்தில் அதிகமாக உற்பத்தியாகும் பழங்களின் வியாபார முன்னேற்றத்தை அதிகரிக்கும் பொருட்டாகவே ஒவ்வொரு ஆண்டும் ஆரஞ்சு திருவிழா நடத்தப்படுகிறது.
அதன் பின்னணியில், இம்மாநிலத்தின் சமூக-கலாச்சார முன்னேற்ற நடவடிக்கைகளும் நடத்தப்படுகின்றன. இன்றைய நாட்களில் மணிப்பூரின் முக்கியமான சுற்றுலா நடவடிக்கைகளில் ஒன்றாக ஆரஞ்சு திருவிழா உள்ளது.
வேறு வேறு வியாபரிகளின் சந்திப்பிற்கும் மற்றும் அவர்களின் வியாபார உறவு வலுப்படுதற்கும் உதவுவது மட்டுமல்லாமல், ஆரஞ்சு திருவிழாவின் போது சில இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
ஆரஞ்சு திருவிழாவின் ஒரு முக்கியமான அம்சமாக, மாநிலம் முழுவதிலிமிருந்தும் வரும் பெண்கள் பங்கு பெறும் ஆரஞ்சு அழகு ராணி போட்டி (Orange Beauty Queen Contest) உள்ளது.