காஸ் பதர் என்று அழைக்கப்படும் காஸ் பீட பூமி டப்போலாவின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். இந்த அகன்ற பள்ளத்தாக்கு, முன்பனிக் காலமான ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலங்களில் 150-க்கும் அதிகமான பூவினங்கள் நிரம்பி வழிய, மலர் படுக்கையாகவே காட்சியளிக்கும். அதே போல் இதனருகில் உள்ள காஸ் ஏரியும் இயற்கையின் உன்னதப் படைப்பாய் காண்போரை சொக்க வைக்கும்.