துர்கையம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பைரவி கோவில் தேஜ்பூருக்கு வெளியே பிரம்மபுத்திரா நதிக்கு குறுக்கே ஓடும் பிரம்மாண்டமான கொலியா பொமாரா பாலத்திற்கு முன்பாக அமைந்துள்ளது. பமுனி குன்றின் பழங்கால மிச்சங்களுக்கு அருகே இக்கோவில் உள்ளது.
பானாசுரரின் மகளான இளவரசி உஷா துர்கையம்மனை வழிபட தினமும் இங்கு வந்ததாக நம்பப்படுகிறது. பழங்காலத்திய கோவில் என கருதப்படும் இக்கோவிலில் மிருகங்களை பலியிடும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
பைரவி கோவிலை அடைய பயணிகள் நீண்ட படிகளை கடக்கவேண்டியிருக்கிறது. சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோவிலை தற்சமயம் மாவட்ட துணை ஆணையாளர் நிர்வகித்து வருகிறார்.
பைரவி கோவிலை அடைவது கடினமான காரியமல்ல. வாகனங்களின் மூலமோ பேருந்துகள் மூலமோலஊரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இலக்கை அடையலாம்.



Click it and Unblock the Notifications