தேஜ்பூரின் சுற்றுலா ஈர்ப்புகளிலேயே மிக முக்கியமானதாக இந்தப் பாலம் கருதப்படுகிறது. நாகோன் மாவட்டத்தை சோனித்பூர் மாவட்டத்துடன் இணைக்கும் இந்த பாலம் 3.015கிமீ நீளமாக உள்ளது.
கட்டிடக்கலைக்கு உதாரணமாகத் திகழும் இப்பாலம் வட கிழக்கு மகாணங்களின் வளர்ச்சியின் ஆரம்பக்குறியாக கருதப்படுகிறது. 1981ல் இருந்து 1987வரை ஆறுவருடங்கள் கட்டப்ப்பட்ட இந்த பாலம் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கப்பட்டது.
இப்பாலத்தின் வருகைக்கு முன் வட கிழக்கு மகாணங்கள் இடையில் இருந்த பிரம்மாண்டமான பிரம்மபுத்திரா நதியால் நாட்டின் மற்ற இடங்களில் இருந்து கிட்டத்தட்ட ஒதுக்கி வைக்கப்பட்டநிலையிலேயே இருந்தன.
புகழ்பெற்ற அஹோம் ராணுவ அதிகாரியான கொலியா பொமொரா புகான் என்பவரின் பெயரால் இப்பாலம் அழைக்கப்படுகிறது. சோனித்பூர் மாவட்டதிற்கு உயிர்நாடியாக திகழ்வதோடு மிக அழகான பாலமாகவும் விளங்குகிறது.
பிரம்மபுத்திரா நதியின் கரைகளில் இருந்து இப்பாலத்தைக் காண்பது பிரம்மாண்டமான ஒரு உணர்வைத் தருகிறது. குறிப்பாக சூரிய உதயத்தின் போதும், மறைவின் போதும் இந்த காட்சிக் கோணம் சிறப்பாக இருக்கிறது.