ஜவஹரில் அமைந்துள்ள இந்த அரண்மனை பழங்குடி ராஜ வம்சமான முங்கே பரம்பரை வசித்த இடமாகும். ஜவஹர் என்றும் அறியப்படும் இந்த அரண்மனை பழங்குடி வம்ச அரசரான யஷ்வன்ராவ் முகானே என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இது ராஜ் பரி என்றும் அழைக்கப்படுகிறது.
புதுமையான கட்டிடக்கலை அம்சம் மற்றும் தொன்மையான அம்சங்களைக்கொண்டிருக்கும் இந்த அரண்மனை சுற்றிலும் பசுமையான அடர்த்தியான காடுகள் சூழ ஒரு உயரமான பாறை மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையிலிருந்து பார்த்தால் சுற்றிலும் உள்ள தொடுவானம் வரை பார்க்க முடிவதால் அந்த அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்றாகும்.
80 அறைகளைக்கொண்டிருக்கும் இந்த அரண்மனையில் காணப்படும் இருக்கைகளும் அலங்காரங்களும் நமக்கு அக்காலத்தைய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துகின்றன. பதப்படுத்தப்பட்ட புலி உருவங்களையும் ஒரு பெரிய ஆடம்பரமான வரவேற்பு மண்டபத்தையும் இங்கு பார்க்கலாம்.
இந்த அரண்மனையை சுற்றிலும் முந்திரி தோப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. மிக முக்கியமான சுற்றுலா அம்சமான ஜய் விலாஸ் அரண்மனை தானே மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications