மேகமலையின் பின்பகுதியில் உள்ள அழகிய இடம் தான் சண்முகா நதி அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டு தேனி மாவட்டத்தின் ராயப்பன்பட்டியில் சண்முகா நதியில் கட்டப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தின் கிராமங்களான ஆப்பிபட்டி, வெள்ளையம்மாள்புரம், பூசாரிகவுண்டன் பட்டி, ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை மற்றும் சுக்கங்கால் பட்டி ஆகியவை இந்த அணைக்கட்டின் நீர்த்தேக்கத்தால் பலன் பெறுகின்றன.
இந்த அணைக்கட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சண்முகா கோவில் என்ற முருகப் பெருமான் கோவில் உள்ளது.