இந்த நகரத்தில் பிரதானமாக பார்க்க வேண்டியது, இங்குள்ள முருக பெருமான் கோவில். வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் வீற்றிருக்கும் இந்தக் கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இங்கு சிவ பெருமானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் கூட சன்னதிகள் உள்ளன. இந்தக் கோவில், வேத காலத்திலிருந்து உள்ளதாக பழங்காலச் சுவடிகள் கூறுகின்றன. ஒன்பது அடுக்காக அமைந்த கோபுரம், பிரதான வாயிலாக உள்ளது.
இங்கு தண்ணீர் ஊற்றை ஒட்டி அமைந்துள்ள நாழிக்கிணறும் உள்ளது. நுழைவாயில் தெற்கை நோக்கி இருந்தாலும், செந்திலாண்டவராக காட்சி அளிக்கும் முருக பெருமான், கிழக்கை நோக்கி அமைந்துள்ளார்.
கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் இதுதான் என்பது இதன் சிறப்பம்சம். மற்றவை அனைத்தும் குன்றின் மீதோ, வனத்திலோ உள்ளன.
பிரம்மோத்ஸவம், வசந்தோத்சவம், வைகாசி விசாகம்,கந்த சஷ்டி, ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா மற்றும் ஊஞ்சல் சேவை ஆகிய பண்டிகைகள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.