திருவாரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இப்பூங்கா, பொதுமக்களுக்கான சிறந்த பொழுது போக்கு மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது, தோட்டக்கலைக்கு சிறப்பான ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இப்பூங்கா, நகரின் வர்த்தகப் பரிவர்த்தனைப் பகுதியில் அமைந்திருந்தாலும், நகரின் பரபரப்புகளில் இருந்து விலகி, அமைதியான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான நடைபாதைகள், நீரூற்றுகள், மற்றும் குழந்தைகளுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பகுதி என அனைத்து வயதினரையும் கவரக் கூடிய வகையில், இப்பூங்கா அமைந்துள்ளது. இது நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால், இங்கு செல்வது எளிது.
இவ்விடத்தில், பல்வேறு விதமான அரிய வகை மரங்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால், மாசுபட்ட நகரத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில், இங்கு தூய்மையான பிராணவாயு, அபரிமிதமாகக் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications