மணப்பாடு கடற்கரை மற்றும் தேவாலயமானது திருச்செந்தூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும் கன்னியாக்குமரியில் இருந்து 70 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த தேவாலயமானது புனித சிலுவை தேவாலயம் என்று அறியப்படுகிறது.
இது 1581 ம் ஆண்டு கட்டப்பட்டது. தூய பிரான்ஸிஸ் சேவியரோடு தொடர்புடைய இந்த தேவாலயமானது கடற்கரையில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள சிலுவையின் குறுக்கு கட்டைகள் ஜெருசலேம் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்று கூறப்படுகிறது.