தௌபல் மாநகராட்சியில் அதன் பணித் தலைமையிடத்திற்கு அடுத்த பெரிய நகரம் கக்சிங். இது ஒரு முக்கிய வணிக மையமாகும். ம்யன்மார் எல்லையிலிருந்து 70 கி.மீ.தொலைவிலும் இம்பாலிலிருந்து 44 கி.மீ. தொலைவிலும் உள்ள கக்சிங், தௌபல் மாநகராட்சியில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். தௌபல் மாநகராட்சியின் இரு துணைக் கிளைகளில் ஒன்று தான் கக்சிங். வைகொங் என்பது மற்றொரு துணைக் கிளை.
கக்சிங் துணைக் கிளையில் பல வகையான காய்கள், அரிசிகள் மற்றும் மீன்கள் வளர்க்கப்படுவதால் இந்த இடம் முக்கிய வணிக மையமாக விளங்குகிறது. இங்கிருந்து மாநிலத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு மாநில நெடுஞ்சாலை வழியாக செல்லும் வசதி உள்ளன. இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கும் சிறிது நேரத்தில் செல்லலாம்.
தௌபல் மாநகராட்சியின் விவசாய மையம் மட்டுமல்ல கக்சிங். ஸ்ரீ கிருஷ்ணசந்திர கோவில், விஸ்வநாத் கோவில் மற்றும் நரசிங்க கோவில் போன்ற கோவில்களுக்காகவும் கக்சிங் புகழ் பெற்று விளங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் போது இங்கு 100 ஏக்கர் பரப்பளவில் பல்லேட் விமான தளம் ஒன்றும் இருந்தது.



Click it and Unblock the Notifications