கடற்கரைப்பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது அப்பகுதியின் மீன்பிடி கிராமத்துக்கும் விஜயம் செய்து ரசிப்பது உள்ளூர் கலாச்சாரத்தை நன்கு புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இந்த சவக்காட் எனும் மீன்பிடி கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சற்று விலகி மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு இணையாகவே அமைந்துள்ளது.
திரிசூர் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள இந்த அழகிய கடற்கரை கிராமம் தன் மாசுபடாத கடற்கரைகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. நவீனமயமாக்கம் இன்னும் இப்பகுதியை நெருங்காததால், இயற்கை எழிலானது தன் கன்னித் தூய்மையுடன் மிளிர்கிறது. இங்குள்ள கடற்கரையை ஒட்டி வரிசையாக அமைந்திருக்கும் ஈச்ச மரங்கள் ஒரு தீவு போன்ற தோற்றத்தை தருவதால் பார்த்தவுடன் இக்கடற்கரை நம் கண்களை கவர்கிறது.
இங்கு பாலையூர் சர்ச் எனப்படும் ரோமன்-சிரியன் பிரிவைச்சேர்ந்த தேவாலயம் ஒன்றும் தேசிய நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் திரிசூர் நகரிலிருந்து இந்த சவக்காட் கடற்கரை ஸ்தலத்துக்கு இயக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications