இந்த ‘இஸ்கான் கிருஷ்ண பஹவான் கோயில்’ திருமலையை நோக்கி செல்லும் பாதையிலேயே அமைந்துள்ளது. வெண்மையும் தங்கநிறமும் கொண்ட புதுமையான வடிவமைப்புடன் இந்த கோயில் மிளிர்கிறது.
இதன் சுவர்களில் நரசிம்மஸ்வாமி, கிருஷ்ண பஹவான், கிருஷ்ண லீலா மற்றும் வராக ஸ்வாமி ஆகிய சித்தரிப்புகளை பார்க்கலாம். கிருஷ்ணரது லீலைகளை சித்தரிக்கும் வண்ண ஓவியங்கள் இந்த கோயிலின் ஜன்னல் கண்ணாடிகளில் தீட்டப்பட்டுள்ளன.
கிறித்துவ தேவாலய பாணியில் இவை காட்சியளிக்கின்றன. கோயிலின் உட்கூரையை தஞ்சாவூர் பாணி ஓவியங்களும் அலங்கரிக்கின்றன. கருவறையில் கிருஷ்ணர் கோபியர் சூழ காட்சியளிக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் இந்த கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அழகிய நந்தவனப்பகுதியானது கிருஷ்ணலீலா சிற்பங்கள், மலர்ச்செடிகள், தடாகங்கள், நீரூற்றுகள் ஆகியவற்றைக் கொண்டதாக பக்தர்களை வசீகரிக்கிறது.