தரங்கம்பாடியில் குடியமர்வு செய்த பின்பு டேனிஷ்காரர்கள் வடிவமைத்த முதன்மையான கட்டிடங்களில் சிறந்ததாக டேனிஷ் கோட்டையைச் சொல்லலாம். டேனிஷ் காலனியின் வணிக குடியமர்வுகளுக்கு பிறகு, கட்டப்பட்ட முதல் கட்டிடமாக டேனிஷ் கோட்டை உள்ளது.
டேனிஷ் கேப்டன் ஓவ் க்ஜெட்டே என்பவரால் 400 ஆண்டுகளுக்கும் முன்னரே கட்டப்பட்ட இந்த கோட்டை, பல்வேறு காலகட்டங்களில் மீண்டும் கட்டப்பட்டும் மற்றும் புனரமைக்கப்பட்டும் வந்திருக்கிறது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு இந்நிலப்பகுதியை ஆண்டு வந்த டேனிஷ் அரசாங்கத்தின் ஆளுநர் மற்றும் பிற முக்கிய அலுவலர்களின் அரசு தலைநகரமாக இக்கோட்டை இயங்கி வந்துள்ளது.
ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்களடங்கிய பொக்கிஷங்களை பாதுகாத்து வைத்திருக்கும் கோட்டையாக இன்னமும் இந்த டேனிஷ் கோட்டை இருக்கிறது.
இந்த கோட்டையில் பல்வேறு நாடுகளின் கட்டிடக்கலை அம்சங்கள் இருந்தாலும், பெரிய அளவில் மாற்றியமைக்கப்படாமல் இருக்கும் டேனிஷ் கட்டிடக்கலையை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications