இந்தியாவில் தோன்றிய இறை மறுப்புக் கொள்கையை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்துவர்.
சமணர் என்பவர்கள் எளியை வாழ்க்கை, துறவுநிலை ஆகியவற்றைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.
சமணர்கள் தற்போதைய தமிழ் நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் துறவு நிலையுடன் வாழ்க்கை நெறிகளையும் கற்றுக்கொடுத்தனர்.
இந்தியாவில் இறை மறுப்புக் கொள்கையாக இருந்தது நாளடைவில் ஒரு சமயமாக கொண்டாடப்பட்டது. சமண சமயம் என்பது 24 தீர்த்தங்கரர்களைக் கொண்டது. அவற்றில் கடைசி தீர்த்தங்கரர்தான் மகாவீரர்.
தீர்த்தங்கரர்களின் உபதேசங்களை மக்களிடத்தில் பரப்பியவர்களை கணாதரர்கள் என்பர்.
திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என்பது சமணத்தின் இரு பிரிவுகள் ஆகும். சரி சமணர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையுடயவர்கள் தான். அவர்களுக்கு இந்தியாவில் பல இடங்களில் சிலைகளும் உள்லன. அவற்றில் மிக உயர்ந்த டாப் 12 சிலைகளை இங்கு காண்போம்.

மங்கி துங்கி
அமைதி வழியின் சிலை என்றழைக்கப்படும் இது மங்கி துங்கி எனும் ஊரில் அமைந்துள்ளது.
தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷபானதாவின் சிலை நாசிக் அருகேயுள்ள மங்கி துங்கியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் உயரம் 108 அடியாகும்.
ASethi

சரவனபெலாகோலா
விந்தியகிரி மலையில் அமைந்துள்ள இந்த சிலை 57 அடி உயரம் கொண்டதாகும்.
தீர்த்தங்கரர் கோமட்டேஸ்வராவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த சிலை கர்நாடக மாநிலத்தின் 5 மோனோலித்திக் சிலைகளுள் ஒன்றாகும்.
Ananth H V

பவங்கஜா
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பர்வானி மாவட்டத்தில் தீர்த்தங்கரர் ரிஷபநாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிலை 84 அடி உயரமானதாகும்.

அகின்சா தளம்
இந்திய துணைக்கண்டம் முழுவதும் சுற்றி வந்து சமணத்தை பரப்பிய மகாவீரருக்காக அமைக்கப்பட்ட இந்த சிலை 13 அடி 6 இன்ச் உயரம் கொண்டதாகும்
Jain cloud

வேகல்னா
இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரரான மூல்நாயக் பகவான் பர்ஸ்வ்நாத் சிலை 31 அடி உயரத்தில் உள்ளது.
இது முசப்பாநகரில் இந்த சிலை அமைந்துள்ளது.
Jainvaibhav1307

படா கவுன்
படா கவ்ன் பக்பட் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும். இங்கு ரிஷபாதேவ் தீர்த்தங்கரருக்கு 31 அடியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Pratyk321

புனே
புனே அருகே இந்தாபூரில் இருபதாவது தீர்த்தங்கரரான முனிசுவ்ரத்தாவுக்கு அமைக்கப்பட்ட சிலை.
Drsushrutshah

வாரூர்
ஹூப்ளி அருகே வாரூரில் அமைக்கப்பட்டுள்ள பர்ஷாவனந்தா கோயில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சமண தலம் ஆகும்.
இந்த கோயிலில் பகவான் பர்ஷாவனந்தாவின் மிக உயர சிலையுடன், 8 தீர்த்தங்கரர்களின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
wiki

கர்க்கலா
கர்க்கலாவில் அமைக்கப்பட்டுள்ள 42 அடி உயர சிலை இந்தியாவின் மிக உயர சமண தீர்த்தங்கரர் சிலைகளில் ஒன்றாகும்.
பாகுபலி சிலை அமைக்கப்பட்டுள்ள இந்த பகுதி சமண கோயில் சுற்றுலாவுக்கு மிகமுக்கிய தலமாகும்.
Rvsssuman

சம்பப்பூர்
கிழக்கு இந்தியாவின் மிக உயர சிலையான வாசுபுஜ்யா சிலை சம்பப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது.
இது 31 அடி உயரம் கொண்டதாகும்.
ASethi85

குவாலியர்
குவாலியரில் உள்ள கோபாச்சல் மலைக்குன்றுகளில்
Jolle

கரவ்லி
கரவ்லி
Pratyk321
காலக்கெடு... இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!



Click it and Unblock the Notifications




