இலங்கை அரசு சமீபத்தில் விசா இல்லாமல் வந்து செல்லும் சலுகையை இந்தியர்களுக்கு வழங்கி உள்ளது. அதனால் இனி விசா கட்டுப்பாடுகள் இல்லாமல் ஜாலியாக இலங்கையை சுற்றி பார்க்க போகலாம். அப்படி நீங்க இலங்கை செல்ல பிளான் செய்தால் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான 5 இடங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் இலங்கை டூர் பிளானில் அவசியம் இந்த 5 இடங்களும் இருக்கட்டும்.

இந்திய சுற்றுலா பயணிகள் இப்பொழுது இலங்கையின் அழகையும் அதன் பன்முகத்தன்மையும் எளிதாக ரசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வரலாறு, கலாச்சாரம், இயற்கை, சாகசத்தில் ஆர்வம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றதாக இந்த தீவு நாடு உள்ளது. அக்டோபர் 1, 2024 முதல் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுச் சலுகையை இலங்கை அரசு நீட்டித்துள்ளது. இதனால் இந்த 35 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கையில் விசா இல்லாமல் 6 மாதங்கள் வரை வசிக்க முடியும். இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவதையும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
சிகிரியா சிங்கப்பறை
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான சிகிரியா அற்புதமான இயற்கை காட்சிகளைக் கொண்ட ஒரு உயர்ந்த பாறைக்கோட்டையாகும். இங்கு உச்சிக்கு சென்று பழங்கால ஓவியங்களையும், அரண்மனையின் மிச்சங்களையும் கண்டு வியந்து பார்க்கலாம். பல்வேறு வகையான அயல்நாட்டு தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு தாயகமாக இருக்கும் சுற்றியுள்ள தோட்டங்களை இங்கு கண்டு ரசிக்கலாம்.
யாழ் தேசிய பூங்கா
வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்வையிட வேண்டிய இடங்களில் ஒன்று யாழ் தேசிய பூங்கா. இந்த பரந்த பூங்காவில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. ஒரு ஜீப் சஃபாரி செய்து இந்த அற்புதமான உயிரினங்கள் மற்றும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களை சிலிப்பூட்டும் அனுபவத்துடன் கண்டு ரசிக்கலாம்.

காலி
யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான காலி நகரம் வளமான வரலாற்றை கொண்ட, ஒரு அழகான கடற்கரை நகரமாகும். இங்குள்ள கோட்டை அருங்காட்சியகம் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருக்கும். அழகான கடற்கரைகள் ஓய்வெடுப்பதற்கும் சிறந்த இடங்கள் ஆகும். இந்திய பெருங்கடலின் ஒரு ரம்மியமான சூரிய அஸ்தமனத்தை காண்பதற்கு இது மிகவும் பிரபலமான இடமாகும்.
நுவரெலியா
நுவரெலியா குளிர்ந்த, புத்துணர்ச்சியூட்டும் காலநிலை கொண்ட மலைவாசஸ்தலம் ஆகும். இது பசுமையான தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. சுற்றிலும் மலைகளின் அற்புதமான காட்சிகளை கொண்டது. இங்கு ஒரு அழகிய ரயில் பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள தேயிலை தொழிற்சாலைகளை பார்வையிடவும், அந்த அமைதியான சூழ்நிலையில் ஓய்வெடுக்கவும் ஒரு சிறந்த இடமாகும்.

கண்டி
இலங்கையின் கலாச்சார தலைநகரான கண்டி புத்தரின் நினைவுச் சின்னத்தை கொண்டிருக்கும் பௌத்த தலமாகும். இங்குள்ள பல கோயில்கள், பரபரப்பான சந்தைகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், வண்ண மயமான வருடாந்திர விழாவான கண்டி பெரஹெராவின் பண்டிகை போன்ற பலவற்றை பார்த்து ரசிக்க இது ஏற்ற இடம் ஆகும்.



Click it and Unblock the Notifications



