இந்தியாவில் மிக அதிக வயதான அந்த உயிர் சிப்பூர் நகரத்தில் வாழ்ந்து வருகிறது. அது ஒரு மரம். கம்பீரமாக வளர்ந்து மண்ணை குடைந்து ஒரு பகுதியையே வளைத்து குடையாக மாறி காட்சித் தருகிறது இந்த மரம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்னுமும் தன் வளர்ச்சியில் ஓய்வு கொள்ளாது கிளைவிட்டு அரும்புகளை மலரச்செய்கிறது என்பதுதான். இதன் சிறப்புகளை இந்த பதிவில் காணலாம்.

எங்கேயுள்ளது
மேற்கு வங்க மாநிலம் அவுரா அருகிலுள்ள ஆச்சார்யா சந்திரபோஸ் இந்திய தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ளது இந்த பிரம்மாண்ட ஆலமரம்.
Biswarup Ganguly

பிரம்மாண்டம் என்றால் சும்மாவா
கிட்டத்தட்ட கடந்து 30 ஆண்டுகளாக திட்டமிட்டு பராமரிக்கப்படும் இந்த மரம் கிளைகளை அகலப் பரப்பி, விழுதுகளை செலுத்தி மிகப்பிரம்மாண்டமாக இரண்டு ஏக்கர் அளவில் பரந்து விரிந்துள்ளது.
Biswarup Ganguly

32 வருடங்களுக்கு முன்
அன்று வரை இந்த மரம் பெரியதாக யாராலும் கண்டுகொள்ளப்படாமலே இருந்தது. அதன் பிறகு இயற்கையாகவே அமைந்த தகவமைப்பு சூழல் காரணமாக, இந்த இடத்தை பூங்காவாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுற்றிலும் 3 ஏக்கருக்கு இந்த பூங்கா அமைக்கப்பட்டது.
Biswarup Ganguly

உலக சாதனை
தற்போது இந்த பூங்கா 5 ஏக்கர் அளவுக்கு ஆலமரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக பரந்த ஆலமரங்களுள் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
Biswarup Ganguly

நடக்கும் மரம்
இந்த ஆலமரத்துக்கு இந்தியாவின் பிரம்மாண்ட ஆலமரம் எனவும், நடக்கும் ஆலமரம் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
Biswarup Ganguly

ஆத்தாடி... இவ்ளோ விழுதுகளா
பொதுவாக ஆலமரத்தில் ஐந்தாறு விழுதுகள் பார்த்திருப்போம். ஆனால் இந்த அதிசய நடக்கும் ஆலமரத்தில் 4000 விழுதுகள் தரையுடன் தரையாக உள்ளது. மேலும் ஆங்காங்கே சிறு சிறு விழுதுகளும் காணப்படுகின்றன.
Ankur8100

சுற்றுலா வழிகாட்டி
கொல்கத்தாவிலிருந்து வெறும் 1 மணி நேரத்தில் சென்றுவிடும் அளவுக்கு தூரத்தில் உள்ளது இந்த பூங்கா.

ரயில் நிலையத்திலிருந்து
கொல்கத்தா ரயில் நிலையத்திலிருந்து சகுந்தலா பூங்கா பேருந்து நிலையத்துக்கு சென்றால், அங்கிருந்து பேருந்துகள் மூலம் எளிமையாக சென்றடையலாம்.

பேருந்து நிலையத்திலிருந்து
பேருந்து நிலையத்திலிருந்து S45 எண் பேருந்தில் ஏறி பின் லோட்டஸ் மோர், அங்கிருந்து C1A பேருந்துகள் மூலம் காசிர் பஜாரை அடையலாம். அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் இந்த இடம் அமைந்துள்ளது.

காலநிலை
அனைத்து காலநிலையிலும் இந்த பூங்காவிற்கு செல்லலாம். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் கொல்கத்தாவில் இலையுதிர் காலம் என்பதால் அருகிலுள்ள பகுதிகளுக்கும் சுற்றுலா செல்லும் திட்டமிட்டு செல்லுங்கள்.

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly

இந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க
Biswarup Ganguly



Click it and Unblock the Notifications




