காதல். இப்புவியில் பிறந்த எல்லாருக்குள்ளும் வந்து செல்லும் ஒரு அற்புத நிகழ்வு. காதலுக்காக நாக்கு அறுப்பது, பாக்காமலே காதல்னு ஆரம்பித்து பல்வேறு வகையான காதல் சாகசங்களை பார்த்திருக்கிறோம்.
காதலுக்கு கோட்டை கட்டி கூட கண்டிருக்கிறோம். காதலுக்கு கோயில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
பிருந்தாவனத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு உங்களைக் கூட்டிப்போகிறோம். பிருந்தாவனம் பூமியில் இருக்கும் சொர்க்கம் என்று கூறினாலும் ஆச்சர்யமில்லை.
ஆன்மீகம், சுற்றுலா என இரண்டுக்கும் சிறந்த இடம் இந்த பிருந்தாவனம். அங்குள்ள ஒரு கோயில் பிரேம் மந்திர் என அழைக்கப்படுகிறது. அந்த கோவிலுக்குதான் நாம் இப்போது போகிறோம்.
இது ஒரு இந்து ஆலயமாகும். 54 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ராமனுக்கும் சீதைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் ஜகத்குரு கிரிபாலு மகராஜா காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு கிருஷ்ணரின் பக்தர்களும் வருகை தருகின்றனர்.
இந்தகோயில் கட்டுமானத்திற்கு எவ்வளவு செலவானது தெரியுமா சொன்னால் நம்ப மாட்டீர்கள் 150 கோடி ரூபாய்.