ஐரோப்பிய கண்டத்தில் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்துவந்த காலத்தில், அமெரிக்கா என்ற கண்டமே கண்டுபிடிக்கப்படாத பல நூற்றாண்டுகளுக்கு முந்திய காலத்தில் தமிழர்கள் மட்டும் இன்றும் எப்படி செய்தார்கள் என்று புதிர்போடும் கட்டிடங்களை பாறைகளை கொண்டு எழுப்பியிருக்கின்றனர்.
எல்லா நாளும் மழைக்காலம் இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்
அப்படி தமிழர் கட்டிடக்கலை வெளிப்பாட்டின் உச்சம் என்று சொல்லப்படும் தஞ்சை பெரிய கோயிலை கட்ட பயன்படுத்திய பாறைகளை எங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு?.
வாழ்ந்தா இந்த மாதிரி இடத்துலதா வாழணும் ..ப்பா என்ன பிரம்மாண்டம்!
நார்த்தாமலை !!
தஞ்சை பெரிய கோயிலில் இருந்து 69கி.மீ தொலைவில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும்நார்த்தாமலையில் இருந்து தான் தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கான கற்கள் வெட்டிஎடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
எகிப்தில் பிரமிடு கட்டுவதற்கு தேவையான பல நூறு டன் எடையுள்ள கற்களை நைல் நதியில் கொண்டுவந்தார்களாம். அது இங்கே சாத்தியமில்லை என்னும்போது எப்படி மிகப்பெரிய பாறைகளை இவ்வளவு தூரம் கொண்டு சென்றிருப்பார்கள் என்பதே இன்னமும் யாராலும் கண்டுபிடிக்கப்படாத ஒன்றாக உள்ளது.
Varun Shiv Kapur
நார்த்தாமலை !!
பெரிய கோயிலுக்கான கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட மலை என்பதை தாண்டி தமிழகத்தில் இருக்கும் மிகவும் பழமையான குடைவரைக்கோயில்கள் நார்த்தமலையில் இருக்கின்றன.
Varun Shiv Kapur
நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்:
நார்த்தமலையில் உள்ளவிஜயாலய சோழீஸ்வரம் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடைவரைக்கோயில் ஆகும். திராவிட கட்டிடக்கலை முறைப்படி இல்லாமல் நாகரா கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டிருக்கிறது.
Varun Shiv Kapur
500 கோடி பேரை பார்த்த ரயில் நிலையங்கள் நாமளும் போலாம்!
நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்:
பல்லவர்களின் குடையின் கீழ் நார்த்தமலையை ஆட்சி செய்துவந்த முத்தரையர் மன்னரான சாத்தன் என்பவரால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.
விஜயாலய சோழனால் தான் இக்கோயில் கட்டப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.
Varun Shiv Kapur
என்னத்துக்கு இவ்ளோ நாள் நாம இந்தியாவுல இருக்கோம்?!
நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்:
விஜயாலய சோழீஸ்வரம் கோயிலின் மூலவராக சிவபெருமான் லிங்க ரூபமாக மேற்குநோக்கி காட்சி தருகிறார். மூலவரின் சிலைக்கு மேலே நான்கு அடுக்கு கொண்ட விமான கோபுரம் உள்ளது. இதன் மேல் கலசம் எதுவும் இல்லை.
இக்கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன.
Varun Shiv Kapur
வயநாடுனா சுற்றுலா - சுற்றுலா என்றால் இதுதான்!!! அடிபொலி....
நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்:
விஜயாலய சோழீஸ்வரர் கோயிலை சுற்றி உமா, தக்ஷிணாமூர்த்தி, சப்தகன்னிமார் என எட்டு கடவுளர்களுக்கு சிறிய சந்நிதிகள் கட்டப்பட்டிருக்கின்றன.
அதில் ஆறு சந்நிதிகள் மட்டுமே இன்று உள்ளன.
Varun Shiv Kapur
நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்:
இந்த கோயிலை கட்டியதற்கு பிறகான 300 ஆண்டுகளில் தான் தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் என சோழர்கள் சிற்பக்கலையில் உச்சம் தொட்டிருக்கின்றனர்.
சோழர் வரலாற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வமுடையவர்கள் நிச்சயம் செல்ல வேண்டிய கோயில் இது.
Varun Shiv Kapur
நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்:
விஜயாலய சோழீஸ்வரத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சிற்பம் !!
Thangamani
நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்:
சப்தகன்னிமார் !!
Thangamani
நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்:
நார்த்தாமலை கல்வெட்டுகள் !!
Thangamani
நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்:
விஜயாலய சோழீஸ்வரத்தின் முகப்பு !!
Fxpremji