பஞ்சாபின் புகழ்பெற்ற ஊரான பதிந்தா, 6ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை ஆண்ட பதி ராஜபுத்திர வீரர்கள் நினைவாக இப்பெயர் பெற்றுள்ளது. வளமான கலாச்சாரத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் இங்கு ஏராளமான பயணிகள் வருகிறார்கள்.
Cover pc: pindisidhu
அருகிலுள்ள சுற்றுலா இடங்கள்
மத முக்கியத்துவம் வாய்ந்த இந்நகரத்தில் ஏராளமான கோவில்களும், குருத்வாராக்களும் உள்ளன. சிறிய கற்களால் கட்டப்பட்டு பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் குய்லா முபாரக், காட்டுக்குள் இருக்கும் குருத்வாரா லாகி ஜங்கிள் சாஹிப் போன்ற மத தளங்களும், செடாக் பூங்கா, டம்டமா சாஹிப், பதிந்தா ஏரி, தோபி பஜார், பீர் ஹாஜி ரத்தானின் மசார் ஆகிய சுற்றுலா இடங்களும் உள்ளன.
மிகவும் ஆடம்பரமான தங்கிமிடம் வேண்டும் பயணிகள் பாஹியா கோட்டைக்கு செல்லலாம். 193ல் கட்டப்பட்ட இந்தக் கோட்டை தற்சமயம் நான்கு நட்சத்திர விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. பதிந்தா அடைய வழி டெல்லியில் இருந்து 326கிமீ தொலைவில் உள்ள பதிந்தாவை 6மணி நேர சாலை பயணத்தில் அடையலாம். சுற்றியுள்ள நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பான பேருந்து மற்றும் கார் வசதி உள்ளது. லூதியானா வரை விமானத்திலும் பின்னர் அங்கிருந்து பதிந்தாவிற்கு வாடகைக் காரிலும் பயணிக்கலாம். பயணிக்க சிறந்த பருவம் அக்டோபர் முதல் மார் வரையிலான காலத்தில் பதிந்தாவிற்கு பயணிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.
பதிந்தாவில் தங்கும் பயணிகள் படகு சவாரிகளுக்காகவும், நீர் ஸ்கூட்டர் சவாரிகளும், காஷ்மீரி ஷிகாரி சவாரிகளுக்காகவும் இங்கு வருகிறார்கள்.
பிர் தலாப் வனவிலங்கு பூங்கா பதிந்தாவில் இருந்து 7.2கிமீ தொலைவில் உள்ளது. சம்பார், சிறுத்தை, ப்ளாக் பக் மான்கள் என பலவகை விலங்குகள் இங்கு உள்ளன.
பிர் தலாப் வனவிலங்கு பூங்கா பதிந்தாவில் இருந்து 7.2கிமீ தொலைவில் உள்ளது. சம்பார், சிறுத்தை, ப்ளாக் பக் மான்கள் என பலவகை விலங்குகள் இங்கு உள்ளன.