இந்த அமைதியான புஷ்கர் நகரமானது மூன்று பக்கங்களில் சிறுகுன்றினால் சூழ்ந்திருக்கிறது. சாதாரண நாட்களில், முனுமுனுக்கும், தாளமிடும் சத்தம் கேட்க, 400 ஆலயங்களுக்கு வீடாகவும் இந்த சிறிய நகரமானது விளங்கிட, அதீத மரியாதைக்குரிய ஆலயமாக பிரம்மா ஆலயம் காணப்பட, நாம் பார்க்க வேண்டிய இடமாகவும் அமையக்கூடும். இந்த பெயர் பெற்ற இடத்தை ராஜஸ்தானின் ரோஜா தோட்டம் என அழைக்கப்பட, புஷ்கர் உலகிலேயே ரோஜாவுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. தெய்வீக சாரம் பூசப்பட்ட புஷ்கர் ரோஜாக்கள், உங்களை பார்த்து சிரித்து கற்பனையை படரவிட, உங்களுடைய உடலின் உறுப்புகள் யாவும் அன்றைய நாளில் அதன் பெயரையே உச்சரித்து துடிக்கவும் செய்கிறது.
புஷ்கருக்கான பயணமாக ஆகசிறந்த யாத்ரீக தளங்கள் அமைகிறது. இங்கே நம்பிக்கையுடன் காணப்படும் சார் தம் யாத்ராவானது நம் மனதில் முழுமையை விதைத்திட, இரட்சிப்புடன் காணப்படுகிறது புஷ்கர். இந்த இரட்சிப்பானது முழுமை பெறாத பட்சத்தில் யாத்ராவும் முழுமையடைவதில்லை. இந்த வண்ணமிகு நகரத்துக்கு வரும் நம்மை, பல அயல் நாட்டவரும் ஆசிர்வதித்து நம் நாட்டின் புகழை போற்றிட, அவர்கள் புஷ்கரில் குடியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியம், கலாச்சாரம், வரலாற்றின் அதீத உற்சாகத்துடன் நம்மை வரவேற்கும் புஷ்கர் எண்ணற்ற மகிழ்வையும் நம் மனதிற்கு தருகிறது.
புஷ்கரை நாம் காண சிறந்த நேரங்கள்:
சுற்றுலா பயணிகளால் பார்க்கப்படும் இந்த புனித நகரமானது நவம்பர் மற்றும் மார்ச் மாதத்தில் காணப்பட வேண்டிய இடமாக அமைகிறது. குளிர்க்காலமானது சுற்றுலாவிற்கு சிறந்த நிலையில் அமைய, இலக்குகளையும் ஆராய உதவிடக்கூடும். பாலைவனப்பயணமானது இந்த பருவத்தில் நாம் செய்ய வேண்டிய விசயமாக அமைகிறது. பல விழாக்களும், விசேஷங்களும் நம் கரங்களை இறுகப்பிடித்து குளிர்க்காலத்தில் நம் கைகளை கட்டிப்போடவும் செய்கிறது.
கோடைக்காலமானது சூடாகவும், பருவமழைக்காலமானது மழை பெரிதற்று காணப்படுகிறது. ஒரு சில சுற்றுலா பயணிகளே இந்த கால கட்டத்தில் இங்கே வந்து பார்த்தும் செல்கின்றனர்.
PC: Nicholas Kenrick
புஷ்கரை நாம் காண போவது எப்படி?
தில்லி முதல் புஷ்கர் வரையிலான ஒட்டுமொத்த தூரமாக தோராயமாக 415 கிலோமீட்டர் காணப்பட, வழியாக முதலாம் வழி, இரண்டாம் வழி காணப்பட, அது நீண்டு 460 கிலோமீட்டரும் செல்கிறது. இவ்வழியானது கீழ்க்காணும் வகையில் விவரிக்கவும்படுகிறது.முதலாம் வழி:
தில்லி - ரோத்தக் சாலை - தில்லி அஜ்மீர் விரைவுசாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை 48 - பவோட்டா - தேசிய நெடுஞ்சாலை 448 வழியாக வெளியே - புஷ்கர் இருவழிசாலை - படி பஸ்டி - புஷ்கர்.
இரண்டாம் வழி:
தில்லி - Dr. NS ஹரித்கர் சாலை வழி தேசிய நெடுஞ்சாலை 9 - மஹாத்மா காந்தி சாலை வழி தேசிய நெடுஞ்சாலை 48 - ஆல்வார் பிவாடி சாலை - தேசிய நெடுஞ்சாலை 248A - தேசிய நெடுஞ்சாலை 448 வழியாக வெளியே - புஷ்கர் இரு வழி சாலை - தேசிய நெடுஞ்சாலை 58 - புஷ்கர்.
முதலாம் வழி பரிந்துரை செய்யப்படுகிறது. புஷ்கரை நாம் அடைய 7 மணி நேரங்கள் ஆக, தில்லியிலிருந்து வழியாகவும் அமையக்கூடும். இரண்டாம் வழியை தேர்ந்தெடுக்க 9 மணி நேரமும் ஆகக்கூடும்.
நீம்ரானா:
தில்லியிலிருந்து அதிவிரைவில் புறப்பட, நீம்ரானாவிலிருந்து 130 கிலோமீட்டர் பயணமாகவும் அமைகிறது.
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் காணப்படும் நீம்ரானா, மஹாராஜா பிரித்வி ராஜ சௌகனுக்கு புகலிடமாக விளங்குகிறது. வரலாற்று ஆர்வலர்களை மட்டுமல்லாமல் தொழிற்சாலை பகுதிகளையும் கொண்டு இவ்விடம் ஈர்க்கிறது. ஜப்பானியர்களின் தொழிற்சாலை மண்டலம் மற்றும் கொரிய தொழிற்சாலை மண்டலமென இப்பகுதியில் வேரூன்றி காணப்படுகிறது.
இந்த கோட்டையை காணும் நாம் தங்கவும் ஆசைக்கொள்கிறோம். இவ்விடமானது உங்களுடைய பட்ஜெட்டுக்கு பொருந்தவில்லை என்றால், இந்த அரண்மனையையாவது நாம் பார்த்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. சரிஷ்கா தேசிய பூங்கா, பல்லா க்யூலா, பழமையான பவோரி என இங்கே காணப்படுகிறது. இவை அனைத்தும் பழமையான கட்டிடக்கலையின் அழகை பிரதிபலிக்கிறது. சாகச விரும்பிகளுக்கான ஷிப் லைனிக் என பல வசதிகளையும் கொண்டு நீம்ரானா காணப்படுகிறது.
PC: Astoriajohn
ஜெய்ப்பூர்
இன்னும் 155 கிலோமீட்டர் நாம் செல்ல, இளஞ்சிவப்பு நகரத்தையும் அடைகிறோம்.
புகழ்மிக்க டால் பாத்தி சுர்மாவை நாம் தவிர்க்காமல் பார்க்க வேண்டியதாக அமைய, இம்மாநிலத்தில் பிரதானமாகவும் காணப்படுகிறது. அத்துடன் ஜெய்ப்பூரை கடந்து வேறு என்ன அழகால் நம் மனதிற்கு விருந்து படைக்கப் போகிறதென்னும் ஆர்வமும் நம் மனதிற்குள் எழக்கூடும். ராஜஸ்தானி கலாச்சாரத்தை தாங்கிக்கொண்டு உணவிலிருந்து உடை வரை என நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் சோக்கி தானியும் இங்கே காணப்படுகிறது.
வெளிப்படையான காரணமாக, இந்த தலைநகரமானது ஆராய்ந்து நாம் காண பல இடத்தை கொண்டிருக்கிறது. இவ்விடமானது திருமணத்தின் போது ஷாப்பிங்க் செய்ய இனிதான இடமாக அமைகிறது. ஹவா மஹால், அமீர் கோட்டை மற்றும் ஜால் மஹால் என மதிமயக்கும் கட்டிடக்கலையும், வரலாற்றும் புதைந்த இடமாகவும் நம்மை அழைத்து ஆனந்தத்தை தருகிறது.
ஜெய்ப்பூரின் தெருக்கடைகள் நாம் தவிர்க்காமல் செல்ல வேண்டியதாக அமைகிறது. ராவத் மிஸ்தான் பந்தருக்கு நாம் செல்ல நாவை சுழற்ற வைக்கும் பியாஸ் கி கச்சோரியும் மிகவும் சிறப்பான உணவாக இங்கே அமைகிறது. இங்கே வழியில் செல்வதற்கு ஏதுவாக உணவை பட்டியலிட்டு சாப்பிடுவது அவசியமாக, ராஜஸ்தானுக்கான டூரும் சிறப்பாக அமைகிறது. குற்ற உணர்வற்று வயிறை நிரப்பிக்கொள்ள ஆசைப்பட்டால், லெஸியை பருகவேண்டியதும் அவசியமாகிறது.
ஜெய்ப்பூர் நகரத்தை நாம் கடக்க, 146 கிலோமீட்டர் பயணம் மூலம் தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக செல்ல, கண்கவர் நகரமான புஷ்கரையும் அடைகிறோம்.
PC: Ziaur Rahman
புஷ்கரை அடைய மாற்று வழிகள்!!
தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?
புஷ்கரில் இரயில் நிலையமென்பது கிடையாது. இருப்பினும், அஜ்மீர் தான் அருகாமையில் காணப்படும் இரயில் நிலையமாகும். மேலும் பல தகவல்களுக்கு, இங்கே பார்க்கவும்.
சாலை மார்க்கமாக அடைவது எப்படி?
தில்லி மற்றும் புஷ்கருக்கு இடையே தினமும் இரு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவ்விடத்தை நாம் அடைய, தோராயமாக 9 மணி நேரமாகிறது. மேலும் பல தகவலை சேகரிக்க...
ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?
இன்றைய நாளில், புஷ்கருக்கு அருகாமையில் காணப்படும் சர்வதேச விமான நிலையமாக ஜெய்ப்பூர் காணப்படுகிறது. அங்கிருந்து நாம் விரைவாக கிஷான்கார்ஹ் விமான நிலையத்தை அடைகிறோம். இந்த தூரத்தை கடக்கும் நாம் புஷ்கரை அடைய, தோராயமாக 45 கிலோமீட்டரும் காணப்படுகிறது.
புஷ்கர் உள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காணப்படும் முக்கிய ஈர்ப்புகள்:
PC: wikimedia.org
புஷ்கர் ஏரி:
புஷ்கர் விழாவிற்கான வீடாக புஷ்கர் ஏரி விளங்க, இந்துக்களின் புனிதமாகவும் விளங்குகிறது. ராஜஸ்தானில் காணப்படும் இவ்விடம் எந்தவித சந்தேகத்திற்கும் இடம் தராத முக்கிய ஈர்ப்பாக அமைகிறது. வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்க, பிரம்ம தேவனால் மதசார்புடன் விழாக்களுக்காக காணப்பட்ட இடமெனவும் வரலாறு சொல்கிறது. இந்த தளத்தில் அவர் தாமரையை மிதக்கவிட, அதுவே இன்று புஷ்கர் ஏரியென அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
PC: K.vishnupranay
பிரம்மா ஆலயம்:
மிகவும் பெயர்பெற்ற சுவாரஸ்யத்தை கூட்டக்கூடும் பிரம்ம தேவனுக்கான ஆலயம் இந்தியாவில் காணப்பட, உயரிய அடிவாரமாக புஷ்கரை அழைக்கப்படுவதற்கான காரணம் இதுவெனவும் தெரியவருகிறது. இந்த மாபெரும் ஆலயத்தின் உள் நுழையும் முன்னே, புனிதம் நிறைந்த புஷ்கர் ஏரியில் நாம் மூழ்கி எழுந்து செல்ல, உங்கள் ஆத்மார்த்தமான உணர்வு, உடல் என அனைத்தும் அமைதியை தேடி ஆலயத்தில் ஆன்மீகத்துடன் சரணடைகிறது எனவும் சொல்லப்படுகிறது.
PC: K.vishnupranay
சாவித்திரி ஆலயம்:
உங்கள் கோபத்தின் உச்சத்தில், காணப்படும் மலை உச்சியா இது? அதனால், பிரம்ம தேவனின் முதல் மனைவியான சாவித்திரி தேவியினை இங்கே காண்பதன் மூலம் கோபம் அடங்கி சாந்தமும் கொள்ள முடிகிறது. இரத்ன கிரி மலை உச்சத்தில் காணப்படும் சாவித்திரி தேவி, கோபத்துடன் பிரம்ம தேவனை நோக்கி தன் கண்களை வைத்திருப்பதாக தெரியவர, அவர் மற்றுமோர் பெண்ணை மணந்துக்கொண்ட கோபமாம் அது. இந்த ஆலயத்தை நாம் அடைய, ஒரு மணி நேரப்பயணமாகவும் அது நமக்கு அமையக்கூடும்.
PC: SINHA
புஷ்கர் விழா:
இந்த புகழ்மிக்க விழாவானது உலகத்தின் பல சுற்றுலா ஆர்வலர்களையும் வெகுவாக ஈர்த்திடுகிறது. இங்கே கிராமத்தினர் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இதன் வண்ணமும், துடிப்பும் விழாவில் ஒரு அங்கமாக நம் கண்களை வெகுவாக கவர்ந்திடுகிறது. ஆண்களால் கால்நடைகளும், குதிரைகளும், என மற்ற பிற கால்நடைகளும் வியாபாரம் செய்யப்படுகிறது இந்த புஷ்கர் ஏரியில்... இந்த விழாவில் இன்னும் பல செயல்கள் காணப்பட, கிராம மக்களாலும் சூழ்ந்து காணப்படுகிறது.
PC: mantra_man
மன் மஹால்:
சரோவர் ஏரியின் ஆற்றங்கரையில் காணப்படும்; காண வேண்டிய முகலாய அரசக்குடும்பத்து அரண்மனைதான் இதுவாகும். இவ்விடமானது முதலாம் ராஜ மன் சிங்கினால் கட்டப்பட, இவர் தான் இங்கே வாசஸ்தல மையத்தை வருபவர்களுக்காக நிறுவியது எனவும் தெரியவருகிறது.