ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் தனது ஆஸ்தான தெய்வமான ராகவேந்திரரை வணங்கினார். அங்கு பல முக்கிய அம்சங்கள் பேசி முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. சரி மந்த்ராலயத்தின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா?
மந்த்ராலயம்
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஒரு கிராமம் மந்த்ராலயம் ஆகும். இது ராகவேந்தர் சுவாமியின் நினைவு திருத்தலமாகும்.
Nsmohan
ராகவேந்தர்
குரு ராகவேந்தர் என்பவர் 17ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்தவர். இவர் பல்வேறு தியான முறைகளை கற்றுத் தேர்ந்தவர். பலரை நல்வழிபடுத்த போதித்தவர்.
துங்கபத்திரை ஆறு
மந்த்ராலயம் துங்கபத்திரை ஆற்றின் கிளையாற்றில் அமைந்துள்ளது.
Ravikiran
அற்புதங்களும் அதிசயங்களும்
ராகவேந்த்ர சுவாமிகள் அவர் வாழ்நாளில் பல அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ்த்தியுள்ளார். அவரது பக்தர்களுக்கு நல்வழி போதித்துள்ளார்.
wiki
எங்குள்ளது
கர்நாடக ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது இந்த இடம். துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் உள்ளது. தமிழ், தெலுங்கு,கன்னட மொழி பேசும் மக்கள் பரவலாக காணப்படுகின்றனர்.
wiki
எப்படி செல்லலாம்
மந்த்ராலயம் ஹைதராபாத்திலிருந்து 250கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. சாலை வழியாக செல்வதென்றால் 6-8 மணி நேரங்கள் ஆகலாம். பெங்களூரிலிருந்து 10 மணி நேரம் ஆகும்.
பேருந்துகள்
பெங்களூருவிலிருந்து வைபவ், அய்ராவத் எனும் பெயருடைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒருவேளை ஹைதராபாத்திலிருந்து சாலைவழியே வந்தால் தேநெஎ 7 வழியாக வரவேண்டும்.
சென்னையிலிருந்து
சென்னையிலிருந்து 600கிமீ தொலைவில் சித்தூர் வழியாக மந்த்ராலயத்தை அடையலாம்.
ராகவேந்த்ரா சுவாமி கோயில்
காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். இங்கு செல்கையில் ஆண்களுக்கு வேட்டி சட்டையும், பெண்களுக்கு சேலையும் அணிந்து செல்லவேண்டும் என்பது கட்டாயமாகும்.
wiki
அருகிலுள்ள சுற்றுலாத் தளம்
இங்கிருந்து 20கிமீ தொலைவில் பஞ்சமுகா கோயில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் முன் இங்கு ராகவேந்தர் தியானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
wiki