மானசா சரோவார் கொடை அல்லது 'தூய்மையின் உருவகமாக' மக்கள் மத்தியில் அறியப்பட்ட மான்சர் ஏரி, ஜம்முவின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. இந்த அழகான ஏரி ஒரு மைலுக்கு அதிகமான நீளமும் அரை மைலுக்கும் அதிகமான அகலமும் கொண்டு பச்சைப்பசேல் காடுகளால் சூழப்பட்டுள்ளது , ஒரு இந்து மத பாம்பு கடவுளான ஷேஷ் நாக் கோவில் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது.
உள்ளூர் நம்பிக்கைக்கு ஏற்ப, புது மண தம்பதியினர் மூன்று 'பரிக்கிரமா' அதாவது ஏரியை மூன்று முறை சுற்றி வந்து ஷேஷ் நாக் தெய்வத்தின் ஆசியை நாடினால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஏரினில் ஸ் நானம் செய்தால் அவர்கள் பாவங்கள் போகும் என்பது மற்றொரு நம்மிக்கை. சுற்றுலா பயணிகள் மான்சர் ஏரியை சுற்றிப்பார்ப்பதற்கு ஒரு படகை எடுத்துகொள்ளலாம்.
தவிர ஷேஷ் நாக் கோவிலில் இருந்து, சுற்றுலா பயணிகள் துர்கா கோவில், பார்வதி, சிவன் அல்லது பழைமை வாய்ந்த உமாபதி மகாதேவ் கோவில் மற்றும் நரசிம்ம கோயிலையும் சென்று பார்க்க முடியும். ஒரு வனவிலங்கு சரணாலயம் இந்த ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.