பாண்டிச்சேரியில் நாம் நுழைய, தென்னிந்தியாவில் இருக்கிறோமா? இல்லை எனில், ப்ரான்சில் இருக்கிறோமா? என நமக்குள்ளே சந்தேகமானது எழக்கூடும். பிரன்ஞ்ச் காலனிகளுள் ஒன்றான இவ்விடம், நீண்ட காலமாக காணப்படும் ஒன்றாகும். இந்த காரணத்தால், இவ்விடம் இன்றும் ப்ரன்ஞ்சின் ஆதிக்கத்தை கொண்டு கலாச்சாரம், கட்டிடக்கலை, சுவையான உணவு, என பலவாறு சிறந்து விளங்குகிறது. இங்கே காணப்படும் பிரன்ஞ்ச் சாலை குறியீட்டை கடந்து ஆங்கிலம் மற்றும் தமிழ் பேசப்படுகிறது. அதேபோல் குறிப்பிட்ட ஒரு சிலரோ சரளமாக பிரன்ஞ்ச் பேச, பல உணவகங்கள் பிரன்ஞ்ச் உணவையும் கொண்டு பரிமாறப்படுகிறது.
சிறு நகரமான பாண்டிச்சேரி, ஒரு நாளில் நாம் ஆராய்ந்திடக்கூடியதாக அமைகிறது. ஒருவேளை உங்களுக்கு அதிக நேரமிருந்தால், இங்கே பிரன்ஞ்ச் குடியிருப்பில் காணப்படும் அழகிய கடற்கரைக்கு சென்று சந்தோசம் கொண்டிடலாம். இங்கே பல அழகிய மற்றும் அமைதியான கடற்கரைகள் நகரத்தில் காணப்பட, அவை ஒன்றை மட்டுமல்லாமல் அனைத்தையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.
ஆரோவில்லி கடற்கரை:
அருகாமையில் காணப்படும் நகரத்தில் ஆரோவில்லி காணப்பட, உங்களுடைய ஆத்மார்த்தமான தேடலுக்கு இவ்விடம் சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த ஆரோவில்லி கடற்கரையை ஆரோ கடற்கரை என அழைக்கப்பட, ஆரோவில்லியின் அருகாமையில் காணப்பட, பாண்டிச்சேரியின் முக்கியமான இலக்காக இது அமைகிறது. ஆரோவில்லியின் முக்கிய ஈர்ப்பாக மத்ரிமந்திர் காணப்பட, மாபெரும் தியான இடமும் அதன் மத்தியில் பசுமையான சுற்றுப்புறத்தையும் சேர்த்தே கொண்டிருக்கிறது.
தங்க நிற சாயலுடன் காணப்படும் ஆரோவில்லி கடற்கரை, மெல்லிய மணலை கொண்டிருக்கிறது. கடலில் நாம் நீந்த, கரையிலும் விளையாடிட; இந்த கடற்கரையானது நமக்காக அமைகிறது.
செரினிட்டி கடற்கரை:
PC: Karthik Easvur
போர்வையால் சூழப்பட்ட தங்க மணல், வங்காள விரிகுடாவின் மின்னும் நீரை மடியில் கட்டிக்கொண்டு காணப்படுகிறது. செரினிட்டி கடற்கரையானது இயற்கையின் மார்பில் ஊறிய பொக்கிஷமாக காணப்பட, ஒதுக்குப்புறமாகவும், அமைதியாகவும், பெருமூச்செறிந்து பார்க்க வைக்கவும் செய்கிறது. பனை மரங்களை எல்லையாக கொண்டிருக்க, அலை மற்றும் கரைகளை விரும்புபவருக்கு இதமான உணர்வையும் தந்திடுகிறது. இந்த கடற்கரையானது நாட்டில் காணப்படும் மற்ற இடத்தை போல் கூட்டமாக இருப்பதில்லை. இந்த உலாவல் இடைவெளிக்கு அனைவரும் நன்றி சொல்ல, அலைகளும் உலகம் முழுவதிலிருந்து எழுவதோடு ஈர்க்கவும்கூடும்.
புரொமேனட் கடற்கரை:
PC: Sarath Kuchi
பாண்டிச்சேரியின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் புரொமேனட் கடற்கரை, பாறை கோட்டு கடற்கரையை கொண்டிருக்க, சோம்பல் உணர்வுடன் அசதியை கழிக்க விரும்புவோருக்கு அருமையான இடமாக அமைகிறது. கௌபர்ட் அவென்யூவிற்கு பக்கத்தில் காணப்பட, அழகிய காலனித்துவ கட்டிடத்தையும் கொண்டிருக்க, இந்த இடத்தின் சிறந்த வழியாக 1.5 கிலோமீட்டர் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கே வருபவர்கள் ஒரு முனையில் மாய்க்யூஸ் டுயூப்லெக்ஷ் சிலையையும், மத்தியில் காந்தி சிலையையும் மற்றும் முதலாம் உலகப்போர் நினைவிடத்தையும் கொண்டிருக்கிறது.
பாராடைஸ் கடற்கரை:
PC: Rupam Dey
நகரத்தின் தெற்கிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் பாராடைஸ் கடற்கரையை 20 நிமிடப்பயணம் வாயிலாக படகு மூலம் அடைய, சுன்னாம்பார் உப்பங்கழியின் வழியாகவும் அமைகிறது. இந்த காட்சியானது ஒட்டுமொத்த பார்வையையும் தந்திட, சுன்னாம்பார் நதி சங்கமிக்கும் இடமாக வங்காள விரிகுடா அமைகிறது. இந்த கடற்கரை தூய்மையான மணலையும், ஆழமற்ற நீரையும் கொண்டிருக்க, இங்கே நீந்துவதற்கும், ஓய்வில் இழைப்பாறுவதற்கும் இவ்விடம் உதவுகிறது. இங்கே சிறு குடிசை காணப்பட, சிற்றுண்டிகளும் கிடைப்பதோடு, புத்துணர்வையும் தரக்கூடும். இந்த கடற்கரையானது தீவு வடிவத்தில் காணப்பட, மணல் பட்டியையும் கொண்டு, கடல் அளவில் பறந்து விரிந்து காணப்படுகிறது.
வீராம்பட்டிணம் கடற்கரை:
PC: Ashwin Kumar
பாண்டிச்சேரியின் முக்கிய நகரத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் சிறுக்குக்கிராமம் தான் வீராம்பட்டிணமாக; நீளமான, அமைதியான கடற்கரையை வீடாக கொண்டிருக்கிறது இந்த வீராம்பட்டிணம். இந்த கடற்கரையானது ஈர்ப்புக்கு பெயர் பெற்று விளங்குகிறது. இவ்விடம் மீன்பிடி கரையாக அமைய, ஆதலால், இங்கே நம்மால் பெருமளவில் மீன் பிடிப்படகுகளையும், கரையின் தொடக்கம் முதல் இறுதி வரை வலைகளையும் காண முடிகிறது. இந்த கடற்கரையின் மெல்லிய மணலது ஒவ்வொரு சுற்றுலா ஆர்வலர்களையும் ஈர்த்திட, கரைகள் முழுவதுமென, மீனவனின் வெளிப்புற அழகையும் காண உதவுவதோடு, மீன்பிடி பாரம்பரியத்தையும் நாம் தெரிந்துக்கொள்ள உதவுகிறது.