சென்னை என்றால் பரபரப்பான நகரம், கடற்கரைகள், மால்கள், திரையரங்குகள், பார்க்குகள் என்று எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமே காணப்படும் இந்த நகருக்குள் தனிமையும், இயற்கை அழகும் கொண்ட சுற்றுலாத் தலங்கள் கம்மி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆம்! சென்னையில் இருந்து ஓரிரு மணி நேர பயண தூரத்தில் அழகிய காடுகள், நீர்வீழ்ச்சிகள், ஜில்லென்ற வானிலை கொண்ட இயற்கை சுற்றுலாத் தலங்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அவற்றில் மிகவும் முக்கியமான 4 இடங்களைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்!

1. சதாசிவகோனா நீர்வீழ்ச்சி
அடர்ந்த மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சென்னை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான். சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த சதாசிவகோனா நீர்வீழ்ச்சியை சென்னை-அம்பத்தூர்-திருவள்ளூர்-நகரி வழியே அடைந்திடலாம். நகரி வரை சென்னையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன, அங்கிருந்து நீங்கள் ஷேர் ஆட்டோ மூலம் நீர்வீழ்ச்சி இருக்கும் பகுதியை அடையலாம். ஆனாலும் பைக்கில் சென்றால் கூடுதல் நன்றாக இருக்கும். பயணிகள் எளிதாக நீர்வீழ்ச்சியை அடையும் வகையில் அம்புகுறிகளும், தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
எதற்காக செல்ல வேண்டும்??
பசுமை மற்றும் பாறை நிலப்பரப்புக்கு மத்தியில் அமைதியான நீர்வீழ்ச்சி இதுவாகும். இந்த அழகிய நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 2-3 கி.மீ மிதமான மலையேற்றம் செய்யலாம். நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள குளிர்ந்த, தெளிவான நீர் கொண்ட குளத்தில் குளிக்கலாம். மேலும், இது பிரபலமான நீர்வீழ்ச்சிகளைப் போலல்லாமல், ஒப்பீட்டளவில் அமைதியாக இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நாகலாபுரம் அருகே உள்ள சிவகோனா நீர்வீழ்ச்சி ஒரு மறைக்கப்பட்ட ரத்தினமாகும், இது சென்னையிலிருந்து ஒரு அற்புதமான வார இறுதிப் பயணமாக அமைகிறது.

2. மாமண்டூர் காடுகள்
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகிய இடமா என்று இந்த இடம் நம்மை வியக்க வைக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்க்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும்.
மிகவும் பாதுகாப்பான இடம்
இந்த வசீகரமான காடுகள் ஆந்திர பிரதேச வனத்துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு பாதுக்காக்கப்பட்டு வருகிறது. அதனால் நீங்கள் பாதுகாப்பு குறித்த எந்த கவலையும் பட வேண்டியது இல்லை. காட்டுப்பகுதியை அடைந்த உடன் உங்கள் வாகனங்களை பார்க் செய்து விட்டு என்ட்ரி டிக்கெட் (entry ticket) வாங்கி கொண்டு நீங்கள் காடுகளை ஆராய ஆரம்பிக்கலாம்.
நீங்கள் அங்கே என்னவெல்லாம் செய்யலாம்
நீங்கள் அங்கே தனியாகவும், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் செல்லலாம். அந்த இடத்தில் தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் பேக்கேஜ்களும், ஆந்திர பிரதேச வனத்துறையால் வழங்கப்படும் பேக்கேஜ்களும் உள்ளன. உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் அதை பெற்றுக் கொள்ளலாம் அல்லது தனியாகவும் செல்லலாம். நீங்கள் அங்கே கீழ்க்கண்டவற்றை செய்து மகிழலாம். இங்கே நீங்கள் நீச்சல், ட்ரெக்கிங், பர்ட் வாட்சிங், போட்டோகிராபி, நேச்சர் வாக்கிங் போன்றவற்றில் ஈடுபடலாம்.

3. நாராவாரிப்பள்ளி நீர்வீழ்ச்சி
பசுமையால் சூழப்பட்ட ஒரு அமைதியான நீர்வீழ்ச்சியான இந்ந்த நாராவாரிப்பள்ளி நீர்வீழ்ச்சி, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மலையேற்றக்காரர்களுக்கான ஒரு மறைக்கப்பட்ட ரத்தினமாகும். இந்த அழகான அருவியை அடைய, பார்வையாளர்கள் பிரதான சாலையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மலையேற்றத்தை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பாதை மிதமான சவாலானது, அடர்ந்த பசுமையான மற்றும் பாறை நிலப்பரப்புகள் வழியாகச் சென்று, மலையேற்றக்காரர்களுக்கு இயற்கையில் மூழ்கும் அனுபவத்தை வழங்குகிறது.
நாராவாரிப்பள்ளி நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிட ஏற்ற காலம், மழைக்காலத்திற்குப் பிந்தைய மற்றும் குளிர்கால மாதங்கள், அக்டோபர் முதல் பிப்ரவரி வரை. இந்த நேரத்தில், நீர்வீழ்ச்சி முழு நீரோட்டத்துடன் இருக்கும், மேலும் சுற்றியுள்ள நிலப்பரப்பு பசுமையாகவும் துடிப்பாகவும் இருக்கும்.

4. ஆனைகுச்சன் மடுவு நீர்வீழ்ச்சி
அழகிய ஜவ்வாது மலைகளில் அமைந்துள்ள ஆனைகுச்சன் மடுவு நீர்வீழ்ச்சி, சென்னையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு வளர்ந்து வரும் வார இறுதி இடமாகும். நகரத்திலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து அமைதியான சுற்றுலாவை வழங்குகிறது. ஆனைகுச்சன் மடுவு நீர்வீழ்ச்சியை அடைய, பயணிகள் சென்னையில் இருந்து செங்கம் நோக்கி வாகனத்தில் சென்று, நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள அடிப்படை கிராமத்திற்குச் செல்லலாம்.
பார்வையாளர்கள் கிராமத்திலிருந்து தொடங்கி, பசுமையான பாதை வழியாக நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ஒரு மலையேற்றத்தை மேற்கொள்ளலாம். சுமார் 5 நிமிடங்கள் கூடுதலாக ஒரு குறுகிய மலையேற்றம் மற்றொரு நீர்வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது, அது இந்த பயணத்தை மேலும் அழகாக்குகிறது. மழைக்காலத்திற்கு பிந்தைய மாதங்களில் இங்கு நீங்கள் வருகை தரலாம், ஏனெனில் நீர்வீழ்ச்சி முழு நீரோட்டத்தில் உள்ளது, மயக்கும் காட்சியை வழங்குகிறது.
இந்த நான்கு இடங்களில் நீங்கள் எந்த இடத்திற்கு இந்த வார இறுதியில் செல்லப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications



