இந்தியா என்றாலே ஆன்மீகத்துக்கும், அரசியலுக்கும் பெயர் பெற்றது என்று உலக அளவில் பேசிக்கொள்கிறார்கள்.
அந்த அளவுக்கு உலகுக்கே கலாச்சாரம் பண்பாடு கற்றுத் தந்த இந்தியாவில் அது மட்டுமா.. அதனுடன் இணைந்த மர்மங்களும், அவிழ்க்கப்படாத முடிச்சுகளும் நிறைந்தே உள்ளன.
அப்படி மன்னர்கள் காலத்து கோயில்களிலும் கோட்டைகளிலும் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் அண்டை நாட்டு விஞ்ஞானிகள் கூட விழிபிதுங்கி நிற்கின்றனர். அப்படிபட்ட இடங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாமா?
சாயா சோமேஸ்வரர் கோயில்
வெளிநாட்டு விஞ்ஞானிகளும் விழிபிதுங்கி வேடிக்கை பார்க்கும் அளவுக்கு பல அதிசயங்களை கொண்டுள்ளது இந்த கோயில்.
Adityamadhav83
கருவறை முடிச்சு
கண்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் அமைப்பில் மூன்று கருவறைகள் உள்ளது. அந்த மூன்று கருவறைகளிலும் மூன்று விதமான மர்மங்கள் உள்ளது.
முதல் கருவறை
இதன் முதல் கருவறை லிங்க கருவறை ஆகும். இங்குள்ள லிங்கத்துக்குப் பின்னால் ஒரு தூணின் நிழல் காணப்படும்.
அதிசய நிழல்
நிழலில் என்ன அதிசயம் என்றால் காலை முதல் மாலை வரை அந்த நிழல் அசைவதே இல்லை.
மர்மம் தெரியுமா
மர்மம் என்னவென்றால் இரவு நேரத்தில்கூட அந்த நிழல் இந்த இடத்தை விட்டு மறைவதே இல்லை.
பிரம்மா கருவறை
இரண்டாவதாக உள்ள கருவறை பிரம்மா கருவறை ஆகும். இந்த கருவறைக்கு எதிரே ஒருவர் நின்றால் அவர் தனது நான்கு நிழல்களை பார்க்கமுடியும்.
மர்மம் இதுதான்
எப்படி ஒரு உருவத்துக்கு நான்கு நிழல்கள் உருவாகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
லிங்கக் கருவறை
இது மூன்றாவது கருவறை ஆகும். இந்த கருவறைக்கு எதிரே ஒருவர் நின்றால் அவரின் நிழல் அவருக்கு எதிரே எப்போதும் விழும் அதிசயம் இங்கு நிகழ்கிறது.
அதிசயம் ஆனால் உண்மை
நிழல் எப்படி எதிர்த்திசையில் விழும் என்பது ஆராய முடியாத ஒன்றாகவே உள்ளது.
கோயிலின் பெயர்க்காரணம்
சாயா என்றால் நிழல் என்று பொருள். அதனால்தான் அக்காலத்திலேயே இந்த கோயிலுக்கு சாயா சோமேஸ்வரர் என்று பெயர் வைத்துள்ளனர்.
நிழல் மர்மங்கள்
இந்த நிழலோடு தொடர்புடைய பல மர்மங்கள் அமானுஷ்யமோ, அதிசயமோ அல்ல.. இது அறிவியல். ஆனால் இந்த நிழல் மர்மங்களின் பின் உள்ள அறிவியலை அறிய முடியாமல் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் குழம்பி வருகின்றனர்.
எங்குள்ளது
இந்த கோயில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.
எப்படி செல்லலாம்
இந்த கோயில் நல்கொண்டா நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது