துர்க்கையம்மன் இந்துக்களின் கடவுள். பார்வதி தேவியின் மறுஉருவமான துர்க்கையம்மனுக்கு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கோயில்கள் உள்ளன.
அதிலும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்த அம்மனுக்கு உள்ள மகிமையை அறிந்தால் உங்களுக்கு தலை சுற்றும்.
சரி.. நீங்கள் நம்புவீர்களா இந்த சிலையின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கிறது என்றால்? மேற்கு வங்க துர்க்கையம்மன் கோயிலுக்கு துர்க்கா பூசையின் போது ஒரு சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள்

உலகிலேயே மிகவிலையுயர்ந்த சிலை
உலகின் மிக மிக விலை அதிகமான சிலை இதுதான். இது கொல்கத்தா நகரத்தில் அமைந்துள்ளது.

ஒரே சிற்பி செதுக்கிய சிலை
பொதுவாகவே சாமி சிலைகளை ஒரு சிற்பி கைப் படத்தான் செய்வார்கள். அதற்காக விரதம் இருந்து செய்வது வழக்கத்தில் உள்ள முறைதான். இதை செய்த சிற்பி இந்த்ரஜித் புதார்.

வைர தங்க அலங்காரம்
வைரங்களும் தங்கங்களும் சேர்த்து அலங்கரிக்கப்பட்ட இந்த சிலை மிகவும் தக தகவென மின்னுகிறது.

வங்கத்து பக்தர்கள்
வங்க மாநிலத்தவர்கள், அதுவும் துர்க்கையம்மன் பக்தர்கள் வருடாவருடம் இந்த விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்

வேறு எங்கேயும் காணமுடியாது
இந்த மாதிரியான விலைமதிப்பற்ற, மிகவும் அழகான சிலையை வேறு எங்கேயும் காணமுடியாது. உலகின் ஒரே சிலை இதுதான் என்று பக்தர்கள் இதன் புகழ் பாடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து சிலையை தொட்டு வணங்கிவிட்டு, அம்மனின் அருளுக்காக வரிசை கட்டுகின்றனர்.
துர்க்கையம்மனின் அலங்கார பொருள்கள் கோடிக்கணக்கில் விலைமதிப்புள்ளவையாகும்.

10 வருடங்கள்
இந்த சிலையை வடித்த சிற்பி இதை முழுமையாக செய்து முடிக்க பத்து வருடங்கள் எடுத்துக்கொண்டுள்ளார்.
முத்து, பவளம் உள்ளிட்ட நவ லோகங்கள் கொண்டு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முத்து
இந்த சிலையின் மேல் முத்துக்கள் அலங்கரிக்கப்பட்டபோது திரிபுரா மாநிலம் அகர்தலாவில் வைக்கப்பட்டிருந்தது.

உச்சந்த் மாளிகை
இந்த சிலை உச்சந்த் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாளிகை அகர்தலாவில் அமைந்துள்ளது.

சிலை உயரம்
துர்க்கையம்மனின் சிலை உயரம் 10.5 அடி ஆகும். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 4 கோடி ஆகும். இந்த கோயிலில் மேலும் கணபதி, லட்சுமி ஆகிய தெய்வங்களின் சிலைகளும் காணப்படுகின்றன.

சுற்றுலாத் தளங்கள்
இந்த இடத்தை சுற்றிலும் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. கோயிலுக்கு சென்று அருள்பெறுவது மட்டுமல்லாது, இந்த இடங்களுக்கும் சென்றுவாருங்கள்.

அகர்தலா சிட்டி சென்டர்
அகர்தலா சிட்டி சென்டர் எனும் இந்த நகர்ப்பகுதி அகர்தலா நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. ஒரு திட்டமிட்ட நகரம் என்பதால் இந்த சிட்டி செண்டர் பகுதி சுத்தமான சாலைகள் மற்றும் இருபுறமும் கடைகள் எனும் அமைப்புடன் காட்சியளிக்கிறது.
PP Yoonus

ஜகந்நாத் கோயில்.
மாணிக்யா ராஜவம்சத்தின் தலைநகரமாக அகர்தலா மாறியபிறகு அவர்கள் இந்நகரத்தை அழகுபடுத்தும் முயற்சிகளில் வெகுவாக தங்கள் முயற்சிகளை செலவிட்டனர். அவற்றில் ஒன்றுதான் திக்கி ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்த அழகிய ஜகந்நாத் கோயில்.
tripuratourism.nic.in

ஜாம்புவி மலை
இயற்கை வளம் நிரம்பிய இந்த ஜாம்புவி மலை அகர்தலாவுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய எழில் அம்சமாகும். அகர்தலா நகரத்திலிருந்து 240 கி.மீ தூரத்தில் அமைந்திருப்பதால் இதற்காக பயணிகள் ஒரு நாளை தனியாக ஒதுக்க வேண்டியிருக்கும்.
tripuratourism.nic.in

நீர்மஹால் மாளிகை
திரிபுரா மன்னர்களின் ராஜ இருப்பிடமாக விளங்கிய இந்த நீர்மஹால் மாளிகை திரிபுராவில் உள்ள அழகிய அரண்மனைகளில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது 6ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள ருத்ரசாகர் ஏரியின் நடுவே கட்டப்பட்டிருக்கிறது.
Soman



Click it and Unblock the Notifications




