இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்ற அழைக்கப்படும் மூணாறைப் பற்றி கேள்விபடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பொள்ளாச்சியிலிருந்து நீங்கள் செல்லும் போது, சின்னார் காடுகளைக் கடந்து மூணாறை நெருங்கும் அந்த மலைப்பாதை, மூணாறைவிட பல மடங்கு அழகானவை. சொல்லப் போனால் அந்தப் பாதை அப்படியே நீண்டு போகக் கூடாதா என்று எவருக்கும் தோன்றும். ஊசி வளைவுகள், சுற்றி படர்ந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், விதவிதமான மலர்கள், இதமான குளிர் என இயற்கையின் ஒட்டுமொத்த குத்தகையாய் விளங்கும் அந்தப் பாதை.
புகைப்பட கருவி வைத்திருபவர்களுக்கு மூணாறைவிட ஒரு சிறந்த இடம் வாய்க்காது. அதிகம் மெனக்கெடாமல், சகட்டு மேனிக்கு சுட்டுத் தள்ளினால், எப்படியும் பத்து படங்களாவது பிரமாதமாய் வந்து விடும். அந்தளவிற்கு ரம்மியமான இடம்.
மேகத்தில் நீந்தும் மலைகள்
Photo Courtesy: Raj
குண்டல ஏரி
Photo Courtesy : Raj
பசுமை பொங்கும் தேயிலைச் செடிகள்
Photo Courtesy : Prathap Ramamurthy
கண்ணன் தேவன் மலை
Photo Courtesy :Ashwin Kumar
மஞ்சள் பூசும் பூக்கள் தொட்டுப் பார்த்தேன்
Photo Courtesy : Niran VV
தேயிலைச் செடியின் க்ளோஸ்-அப்
Photo Courtesy :Abhinaba Basu
தேன் கூடுகள்
Photo Courtesy :Liji Jinaraj
மாலை நேரத்து மயக்கம்
Photo Courtesy: Manu MG
மட்டுப்பெட்டி அணை நீர்பிடிப்பு பகுதி
Photo Courtesy : Liji Jinaraj
ஓடை தரும் வாடைக் காற்று....
Photo Courtesy : aphotoshooter
மூணாறுக்கு நீளும் பாதை
Photo Courtesy:davidbaxendale