Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள்

இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள்

By Super Admin

என்னதான் மனிதன் அறிவுள்ளவனாகவும், திறமையும், பலமும் கொண்டிருந்தாலும் இயற்கையை எப்போதுமே வெல்ல முடியாது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. என்னதான் பிரமிடுகளும், தாஜ்மஹால்களும் மனிதனால் கட்டப்பட்டாலும் இயற்கை நிகழ்த்தும் அதிசயங்கள் நம் கற்பனைக்கும் எட்டாதவை. அப்படித்தான் இந்தியாவில் இயற்கை அன்னை தன அதிசயங்களை நிகழ்த்தும் இடங்கள் சில இருக்கின்றன. வாருங்கள் அவை என்னென்ன என தெரிந்து கொள்வோம்.

ரான் ஆப் கட்சில் நிகழும் சிர் பட்டி :

photo: anurag agnihotri

குஜராத் மாநிலத்தில் தார் பாலைவனத்தை ஒட்டி இருக்கும் ரன் ஆப் கட்ச் மனிதர்கள் வசிக்கும் தன்மையற்ற ஒரு உப்புப் பாலைவனமாகும். இந்த இடத்தில் ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும் இந்தியாவை படையெடுத்து வருகையில் அலெசாண்டரின் படைகள் அந்த ஏரியை கடந்து இந்தியாவினுள் பிரவேசித்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் வெப்பம் அதிகரித்த காரணத்தினால் முழுவதும் வற்றிபோய் உப்பு படிமானங்கள் மட்டுமே இன்று எஞ்சி இருக்கின்றன. ஆர்டிக் பனிப்பிரதேசங்களில் நிகழ்வது போன்ற ஒளி மாயாஜாலம் இங்கும் இரவு நேரங்களில் நடைபெறுகிறது. இதைதான் சிர் பட்டி அதாவது பேய் ஒளி என மக்கள் விழிக்கின்றனர். பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேலே இது நடைபெறுகிறதாம். அமானுஷ்ய விஷயங்களை புகைப்படம் எடுக்க நினைப்பவர்கள் நிச்சயம் இங்கே வரவேண்டும்.

சிரபுஞ்சி:

photo: Alex M George

இந்தியாவின் தென் கிழக்கு மாநிலமான சிரபுஞ்சி உலகத்திலேயே அதிகம் மழை பொழியும் இடமாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு இங்கு மட்டும் 425 செண்டி மீட்டர் மழைப்பொழிவு இருக்கிறது. உலகின் மற்ற பசுமையான இடங்களைக்காட்டிலும் இது 100% அதிகமாகும். எப்போதும் ஒரு விதமான சொதசொதப்புடனே காணப்படும் இந்த இடத்திற்கு முடிந்தால் ஒருமுறை சென்று பாருங்கள். ஏனென்றால் இது மாதிரி ஒரு இடம் உலகத்தில் வேறெங்குமே இல்லை.

காந்த மலைகள், லடாக்:

Photo: Rajesh

லாடாகில் இருக்கும் மிகப்பெரிய நகரமான லெஹ்இல் இருந்து 30கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த காந்த மலைகள். கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இங்கு அளவுக்கு அதிகமான அறிவியலாளர்களால் இன்றும் விளக்க முடியாத அளவு அதீத புவியிர்ப்பு ஷக்தி இருக்கிறது. இதன் காரணமாக நாம் வாகனங்களை இயக்கா விட்டாலும் 20 கி.மீ வேகத்தில் அவை நகர்கின்றன. அவைகளை நாம் பிடிகா விட்டாலும் கீழே விழுவதில்லை. மேலும் இந்த பகுதியின் மேல் பறக்கும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த அதீத புவி ஈர்ப்பில் இருந்து தப்பிக்க கூடுதல் வேகத்துடனேயே பறக்கின்றன. லடாக்கிர்க்கு சுற்றுப்பயணம் செய்தால் இங்கும் தவறாமல் சென்று வாருங்கள்.

சுந்தர வனக்காடுகள் :

Photo: Prosenjit Das Neogi

யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இந்த சுந்தரவனகாடுகள் மலைபூட்டும் அளவு தன்னுள் இயற்கையின் அற்புதங்களை தன்னுள் கொண்டிருக்கின்றன. இங்குதான் மிகவும் அரிதாகி வரும் ராயல் வங்கப்புலிகள் அதிகமாக வாழ்கின்றன. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத தாவர மற்றும் விலங்கினங்கள் இங்கே தழைத்து வாழ்கின்றன. இந்த காடுகளுக்குள் ஓடும் ஆற்றில் படகு மூலம் காட்டின் எந்த மூலையையும் அடைய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.


ஹிமாலய மலைகள்:

இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள்

Photo: Koshy Koshy

சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய இளமையான மலைகள் என்று அழைக்கப்படும் ஹிமாலய மலைத்தொடர்களில் தான் உலகின் உயரமான சிகரங்கள் இருக்கின்றன. உலகின் மூன்றாவது உயரமான சிகரமும் இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமுமாக இருக்கும் கஞ்செஞ்சுங்கா இந்த ஹிமாலய மலைத்தொடர்களில் தான் அமைந்திருக்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகள் தன் உலகின் பாதி மக்கள் தொகைக்கு உயிர் ஆதாரமாக விளங்குகிறது. இதன் சாரில் தான் இந்தியாவின் மூன்றில் ஒரு பாதி மாநிலங்கள் இருக்கின்றன. ஏராளமான சுற்றுலாதலங்கலும், ஆன்மீக ஸ்தலங்களும் இருக்கின்றன. வாழ்வில் ஒருமுறையாவது இந்த ஹிமாலய மலைகளின் பேராற்றலை தரிசிக்க வேண்டும்.

More News

Read more about: nature adventure wonders
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+