இந்திய வரைபடத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும், இமயமலையை நாம் பார்க்கலாம்! இமயமலை அமைந்துள்ள திபெத் எனும் பகுதி மீதி மட்டும் எப்பொழுதும் விமானங்கள் பறப்பது கிடையாது. நீங்கள் விமானம் பறக்கும் வரைபடத்தை (Flight Map) பார்க்கும் போது நீங்களே கண்டுப்பிடிக்கலாம், திபெத்துக்கு மேல் மட்டும் எந்த விமானங்களும் பறக்காது. ஆனால் அதற்கு பின்னால் இருக்கின்ற மர்மங்கள் என்னவென்று பார்த்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது!
திபெத் மேல் மட்டும் விமானங்கள் பறக்காது
விமானப் பாதை திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு மாற்றங்கள் சிக்கலான ஆனால் சுவாரஸ்யமான தலைப்புகள். சில பயணிகள் இதை நெருக்கமாகப் பின்தொடர்வார்கள், தங்கள் விமானம் தங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைக் கண்டு கவருவார்கள், மற்றவர்கள் வானத்தில் பயணம் செய்வதை கவனிக்க மாட்டார்கள். நீங்கள் வரைபடத்தைப் பின்பற்றினால், ஆசியாவிற்கான நீண்ட தூர விமானங்களில் நீங்கள் பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் பரந்த அளவு இருந்தபோதிலும் அவை ஒருபோதும் பறக்காது.

உலகின் கூரை - திபெத்
அதன் அசாதாரண உயரம் காரணமாக திபெத்திய பீடபூமி உலகின் கூரை (Roof of the world) என்றழைக்கப்படுகிறது. திபெத்தின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டருக்கும் அதிகமாக உள்ளது அதாவது 14,000 அடிக்கும் மேல். அதுமட்டுமில்லாமல், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரமும் திபெத்தில் உள்ளது. ஆக மொத்தம், திபெத் முழுக்க உலகின் பல உயரமான சிகரங்கள் உள்ளன. ஆனால் இதற்கும் விமானம் பறக்காததற்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறீர்களா?
பயணிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது
விமானம் இப்பகுதியைத் தவிர்ப்பதற்கான முக்கியக் காரணம் நிலப்பரப்பின் சராசரி உயரம்தான். இந்த பகுதி 14,000 அடிக்கு மேல் உள்ளது. விமானம், நிச்சயமாக, இதை விட அதிகமாக அதாவது 30,000 அடி உயரத்தில் பயணிக்கிறது, ஆனால் அவசரநிலையின் போது, கேபின் டிப்ரஷரைசேஷன் போன்ற நடைமுறைகள், விமான நிலையத்திற்குத் திருப்புவதற்கு முன் 10,000 அடி உயரத்தில் பறக்க வேண்டும். அப்போது தான் விமானத்தில் இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கும். ஆனால் திபெத்தின் சராசரி உயரமே 14,000 அடி எனும் போது விமானம் 10,000 அடி உயரத்தில் பறப்பது சாத்தியமே இல்லை.
மலை சிகரங்களில் விமானங்களை தரையிறக்க முடியாது
அதே போல அவசர சூழல்களில் விமானத்தை தரையிறக்கி சூழலை கட்டுக்குள் கொண்டு வருவது வழக்கம், அது போன்ற சூழல்களில் மலைப்பாங்கான திபெத்திய பகுதிகளில் விமானங்களை தரையிறக்குவது முற்றிலும் சாத்தியம் இல்லாத விஷயம். மீறியும் விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தால், விமானம் சிகரங்களில் முட்டி வெடிப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

மீட்பு பணிக்கு ஆட்கள் கூட வரமாட்டார்கள்
திபெத்திய பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில், உயரம் இந்த குறைந்தபட்ச அவசரநிலை/பாதுகாப்பு உயரத்தை விட அதிகமாக உள்ளது. மேலே விவாதிக்கப்பட்ட அழுத்தம் பிரச்சனைகள் அல்லது என்ஜின் செயலிழப்பை ஈடுகட்ட அவசரகாலத்தில் விமானம் பாதுகாப்பாக கீழே இறங்கும் சூழல் திபெத்தில் இல்லை. அதே போல திபெத்தை ஒட்டிய பகுதிகளில் அதிகப்படியான விமான நிலையங்கள் இல்லாததால் அவசர சூழல்களில் மீட்பு பணிக்கு ஆட்களோ அல்லது விமானங்களோ வருவது கூட மிகவும் கடினம் தான்!
டர்பூயலன்ஸ் காதுகளை கிழித்துவிடும்
அதே போல சுற்றி எல்லாமே மலைகளாக இருக்கும் போது விமானம் மேகத்தை கிழித்துக் கொண்டு பறந்து கொண்டிருக்கும் போது ஏற்படும் சத்தம் (Turbulence) மிகவும் அதிகமாக இருக்கும். எந்த வழியிலும் டர்பூயலன்ஸ் ஏற்படலாம் - நாம் அனைவரும் அனுபவித்திருப்பதைப் போல. ஆனால் இந்த உயரமான மலைப் பகுதியில் அதைத் தவிர்ப்பது மிகவும் சாத்தியம் மற்றும் கடினமாக இருக்கலாம். இது பயணிகளுக்கு இடையூறாக இருக்கும், மேலும் அவசரகால சூழ்நிலையை இன்னும் ஆபத்தானதாக மாற்றும்.
விமான எரிபொருள் உறைந்து போகுமாம்
இறுதிக் காரணமும் மலைப்பாங்கான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ளது, இது விமான எரிபொருள் உறைந்து போகும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது. நிலையான விமான A1 எரிபொருளானது -47 டிகிரி செல்சியஸ் உறைபனி புள்ளியைக் கொண்டுள்ளது. இருப்பினும் திபெத்தின் மலைப்பகுதிகளில் இதை விட குறைவான வெப்பநிலை இருப்பதால், விமான எரிபொருள் உறைந்து போகும் அபாயம் அதிகமாக உள்ளது.
இருந்தாலும், இந்த திபெத் ஏரியாவானது சீன நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிலப்பகுதி, இந்த ஏரியாவில் சுற்றித் திரிவதை சீனா விரும்பாததுதான் உண்மையான காரணமாகவும் இருக்கலாம், அதை ரிஸ்க் செய்யாமல் இருப்பது நல்லது, யாருக்குத் தெரியும்!



Click it and Unblock the Notifications



