இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) பயணிகளின் நலனுக்காகவும் மேம்பட்ட பயணத்தை அளிக்கும் வகையிலும் அவ்வப்போது பல வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. வெவ்வேறு ரயில் முன்பதிவுகளிலிருந்து பயணங்களை இணைக்க (connecting trains) இரண்டு PNR எண்களை லிங்க் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. IRCTC இ-டிக்கெட்டுகள் மற்றும் PRS கவுண்டர் டிக்கெட்டுகள் அல்லது இரண்டின் கலவையாக PNR எண்களை இரயில் பயணிகள் இணைக்கலாம். இதன் மூலம் முதல் ரயிலின் நேர தாமதம் காரணமாக, இரண்டாவது ரயிலைத் தவறவிட்டால், பயணிகள் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கிறது. அதை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்!
எப்படி லிங்க் செய்வது?
o இந்திய ரயில்வேயின் இ-டிக்கெட் இணையதளமான irctc.co.in ஐப் பார்வையிடவும்
o 'பயண முன்பதிவை இணைத்தல்' என்ற விருப்பம் முதன்மை மெனு 'டிரெய்ன்ஸ்' கீழ் உள்ளது, அதனை தேர்ந்தெடுக்கவும்.
o ரயில் பட்டியல் பக்கத்தில் ரயிலில் தங்குமிடம் என்ற மெனுவுக்குள் செல்லவும்
o 'இப்போது முன்பதிவு செய்' என்பதைக் கிளிக் செய்து, இணைக்கும் PNR எண்களை உள்ளிடவும்
o பயணிகள் கவுண்டர் டிக்கெட்டை உள்ளிட வேண்டும் அல்லது அதே பயனர் ஐடியுடன் முன்பதிவு செய்யப்பட்ட PNR பயண டிக்கெட்டை இணைக்க வேண்டும்.
o பயண முன்பதிவை இணைப்பதற்கான தகுதிக்காக PNR சரிபார்க்கப்படும். அது தகுதியுடையதாக இருந்தால், குறிப்பிட்ட PNR இன் பயணிகளின் விவரங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு தானாகவே நிரப்பப்படும்.
o இணைக்கும் பயணத்தை சரிபார்ப்பதற்காக, பயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு IRCTC OTP எண்ணை வழங்கும்.
o பின்னர் இரண்டு டிக்கெட்டுகளின் PNR எண்களும் இணைக்கப்பட்டு விடும்.
PNR எண்களை இணைப்பதற்கான விதிமுறைகள்
o முதல் மற்றும் இரண்டாவது ரயிலுக்கு இடையிலான நேர இடைவெளி ஐந்து நாட்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
o உறுதிசெய்யப்பட்ட அல்லது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே PNR இணைப்பிற்கு அனுமதிக்கப்படும்.
o இரண்டு டிக்கெட்டுகளில் ஏதேனும் ஒன்று ரத்து செய்யப்பட்டால், PNRகள் தானாகவே இணைக்கப்பட்டுவிடும்.
o இரண்டு டிக்கெட்டுகளுக்கும் பயணிகளின் விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
o PNRகள் இணைக்கப்பட்டவுடன் மாற்றங்களைச் செய்ய முடியாது.
o இணைக்கப்பட்ட PNRகளுக்கு பெயர், வயது அல்லது பாலின மாற்றங்கள் அனுமதிக்கப்படாது.
o போர்டிங் ஸ்டேஷன் மாற்றங்கள், விகல்ப் திட்டம் மற்றும் லாயல்டி திரட்டல் முன்பதிவு ஆகியவை PNRகளை இணைக்க அனுமதிக்கப்படாது.
இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், ரயில் தவறிவிட்டால், பயணிகள் தங்கள் ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை எளிதாகத் திரும்பப் பெறலாம். கூடுதலாக, ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்குச் செல்ல நேரடி ரயில் கிடைக்காதபோதும், பயணிகள் விரும்பிய இலக்கை அடைய இரண்டு PNR எண்களை இணைத்திருந்தால் போதும், பயணிகள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.