Search
  • Follow NativePlanet
Share
» »கிராமியக் கலைகளையும், தெருக் கூத்துகளையும் ரசிப்பவரா நீங்கள்?

கிராமியக் கலைகளையும், தெருக் கூத்துகளையும் ரசிப்பவரா நீங்கள்?

கிராமியக் கலைகளையும், தெருக் கூத்துகளையும் ரசிப்பவரா நீங்கள்? அப்போ டெல்லிக்கு போனா இங்கெல்லாம் ஒரு விசிட் போங்க!!

By Bala Karthik

தெருக்களில் காணப்படும் கலையென்பது தைரியமாகவும், எழுதப்படாததாகவும், இயற்கையின் ஈர்ப்பாகவும் அமைய, கட்டுக்கடங்காத கலை வடிவத்தையும் கொண்டிருக்க, இவ்விடமானது அழகையும், தகவலையும் தாங்கிய வண்ணம் காணப்படுகிறது. இந்த தெருக்கலைகள் யாவும் நியுயார்க்கின் சேரிகளிலிருந்து புதுதில்லியின் தெருக்களுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெருக்கலைகளின் பெயர் பெற்ற பல வடிவங்களுள் ஒன்றுதான் இந்த கிராஃபிட்டியாக அமைய, சமூக - அரசியல் தகவலைக்கொண்டும் இன்றைய நாளில் இது காணப்படுகிறது. இவற்றை கடந்து, பாவணைகளின் வடிவமைப்புமென, கிராஃபிட்டியானது அலுத்து போகக்கூடிய இந்த தெருவில் வண்ணத்தை பூசி, நகைச்சுவையும், அதீத ஈர்ப்பையும் தருகிறது. இங்கே எண்ணற்ற நகரங்கள் இத்தகைய தனித்துவமிக்க கலைகளுடன் நாடு முழுவதும் காணப்பட, குறிப்பாக தலை நகரமான தில்லியில் காணப்படுகிறது.

ஆகையால், நான்கு சுவற்றுக்கு நடுவில் அல்லது மால்களில் உங்கள் நேரத்தை செலவிடுவதை காட்டிலும், அதோடு இணைந்து காணப்படும் நகரத்துக்கும் செல்வதோடு, தெருக்கலைகளையும் கண்டு ரசித்திட, தில்லி பாவணைகளையும் கண்டு பரவசம் கொள்ளக்கூடும்.

கிர்கி கிராமம்:

கிர்கி கிராமம்:

தெருக்கலை திருவிழா காணப்படும் கிர்கி கிராமம், இந்திய தற்கால கலையைக்கொண்டு நிறுவப்பட்டு இருக்கிறது. இந்த திருவிழாவானது பெருமளவிலான கலைஞர்களை கொண்டு, தனித்த நடை மேடையையும் அமைத்திருக்க, பேச மறந்த சுவர்கள் கலை நயத்தால் நம்முடன் பேசிட, நளினமும் புலப்படுகிறது. இந்த பிரதான வேலைப்பாட்டின் கொண்டாட்டமாக சுய பாவணையும், நேர்மறை எண்ணங்களும் நம் மனதில் எழ, நாம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்றாகவும் இது அமையக்கூடும்.

ஷாப்பூர் ஜாட்:

ஷாப்பூர் ஜாட்:


இப்பகுதி கலகத்தின் வண்ணங்களாக பூசப்பட்டிருக்கிறது. இந்த சுவற்றில், கிராஃபிட்டி வரையப்படவில்லை என்றாலும், அதன் சாயலானது வெளிர் இளஞ்சிவப்பு, மஞ்சள், மற்றும் நீல நிறத்தை கொண்டிருக்கிறது. இந்த வண்ணமயமான சேர்க்கையானது புகைப்பட ஆர்வலர்களையும் என மாடல்களையும் ஈர்த்திடுகிறது.

இந்த கிராஃபிட்டியானது இதிகாச கதாப்பாத்திரங்களின் நவீன புரிதல்களாக சித்தரித்து காணப்பட, பல்வேறு வித கோணத்திலும் இதன் இயல்பானது நம்மை இங்கே வரவழைத்து அழகிய சாயத்தை எதிர்ப்பார்ப்பின்றி மனதில் பூசுகிறது.

லாக் நாயக் பவன்:

லாக் நாயக் பவன்:

இந்த அமைப்பானது இரு பாகமாக பிரிக்கப்பட்டு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஒக்குடா என்னும் ஆக்கப்பூர்வ கலைஞர்களையும் கொண்டிருக்கிறது. இந்த வேலைப்பாடானது இடைவிடா சக்தியை கொண்டு வாழ்ந்திட, அது நம்மை வெகுவாக ஈர்க்கவும் செய்திடும்.

இந்த கிராஃபிட்டியின் ஒரு பக்கத்தில் இரவு வான் தெரிந்திட, மற்றுமோர் பக்கத்தில் வானவில்லும் அதன் வண்ணங்களும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்த கலை நயமானது பல்வேறு விளக்கங்களையும் கொண்டு, ஒருவரை யோசிக்க வைப்பதோடு, உருவாக்கவும் வைத்திடுகிறது.

ஹௌஸ் காஷ் கிராமம்:

ஹௌஸ் காஷ் கிராமம்:

இந்த பிரதான தெருவான ஹௌஸ் காஷ் கிராமமானது, பப்களையும், கஃபேகளையும், பல்வேறு வடிவமைப்பு அழகு சாதன கடையையும் கொண்டிருக்கிறது. இருப்பினும், இதன் பின்புறமானது அழகிய கிராஃபிட்டி கலைகளால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கிறது.

முதலாளி துறை சாயலானது பிரதான வழியில் காணப்பட, இரு வழி சாலைகளில் ஜனநாயக கலை பாவணைகளும் காணப்பட, அது உன்னதமான உணர்வை நம் நெஞ்சிலே விதைத்து இனிமையை தருகிறது.

லோதி கலை மாவட்டம்:

லோதி கலை மாவட்டம்:


நகரத்தின் முதல் திறந்த வெளி பொது கலை மாவட்டமான லோதி காலனி, NGOவினால் St+கலை என பெயரிடப்பட, இந்த வேலைப்பாடுகளின் முக்கிய இலட்சியமாக கலையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பணியானது காணப்படுகிறது.

இப்பகுதியானது 26 சுவறுகளை கஹன்னா சந்தை மற்றும் மேஹர் சாந்த் சந்தைக்கு இடையில் கொண்டிருக்க, கலகத்தை வண்ணத்தால் மட்டும் வெடித்திடாமல், பல்வேறு எண்ணங்களையும், உணர்வுகளையும் கொண்டுமிருக்கிறது. இதனை கடந்து, சுவற்றில் சுவரோவியங்கள் நிறுவப்பட, அவை அசாதாரண பாவணையையும் கொண்டிருக்கிறது.

Read more about: travel delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X