Search
  • Follow NativePlanet
Share
» »ஆன்மீக நாட்டமுடையவர்கள் கட்டாயம் காண வேண்டிய இடம் கனக துர்கா!!

ஆன்மீக நாட்டமுடையவர்கள் கட்டாயம் காண வேண்டிய இடம் கனக துர்கா!!

ஆன்மீக நாட்டமுடையவர்கள் கட்டாயம் காண வேண்டிய இடம் கனக துர்கா!!

By Bala Karthik

விஜயவாடாவின் கனக துர்காவில் காணப்படும் ஆலயங்கள், சக்தி, செல்வம் மற்றும் ஈகைக் குண தேவிகளுக்கு புக(லி)ழிடமாக விளங்க, அவளை விஜயவாடாவின் முன்னணி தெய்வமாக கருத, நவராத்திரியின் போதும் இலட்சக்கணக்கான யாத்ரீகர்களை கொண்டிருக்கிறது. இந்த பழமையான ஆலயமானது இந்திராகீலாதிரி மலையின் கிருஷ்ணா நதிக்கரையில் காணப்பட, புராணங்களும் பிணைந்திருக்கிறது.

இங்கே காணப்படும் தேவி மற்றும் சிவனின் சிலைகள் சுயமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆலயத்தின் தனித்தன்மையாக துர்காதேவி, சிவபெருமானின் வலப்புறத்தில் அமர்ந்திருக்க, மற்ற ஆலயங்களை காட்டிலும் இது வித்தியாசமாகவும் அமைந்திருக்க, தேவியவள் இடப்புறத்திலும் அமர்ந்திருக்கிறாள். இந்த தன்மையானது தேவி இங்கே முதன்மையானவள் என்பதை காட்டுகிறது.

அசூரன் மலையாக தன்னை மாற்றிக்கொண்டு இருக்கும் இடம்:

அசூரன் மலையாக தன்னை மாற்றிக்கொண்டு இருக்கும் இடம்:


முன்னொரு காலத்தில், கீலா எனப்படும் அரக்கன் ஒருவன் துர்கா தேவியை நோக்கி பல்வேறு தவங்களை புரிந்துவந்தான். இந்த தேவியவள் அவன் தவத்தை ஏற்றுக்கொள்ள, அவன் முன்னே தோன்றி என்ன வரம் வேண்டுமென கேட்டார். இதனால் சந்தோஷமடைந்த அந்த அசூரன், தேவியை எப்போதும் தன் இதயத்தில் வைத்துக்கொள்ளவும் ஆசையாக கேட்டான்.

தேவியும் அதற்கு சம்மதித்து, நீ எப்போதும் இருப்பாய் என கிருஷ்ண நதியின் சமவெளியில் மலை வடிவத்திலும் என கூற, பேய்களின் படுகொலைக்கு பிறகு அவள் அவனுடைய இதயத்திலும் குடிக்கொண்டாள். அவளுடைய சொல்லை காப்பாற்றிய துர்கா, மஹிசா சூரனை கொன்று கீலா மலைக்கு வர அந்த மலையின் இதயத்தில் அவள் வாழ்கிறார் எனவும் நம்பப்படுகிறது.

PC: Kapil28

 அர்ஜுனா மற்றும் பசுபத்தஷ்த்ரா:

அர்ஜுனா மற்றும் பசுபத்தஷ்த்ரா:

மகாபாரதத்தின்படி, அர்ஜுனன் சிவபெருமானிடம் தன்னுடைய ஆயுதங்களை எடுத்துக்கொள்ள வேண்டி தவம் புரிய, அதுதான் பசுபத்தஷ்த்ரா எனவும் சொல்லப்படுகிறது. இந்த ஆயுதமாக, எதிரிகளை எதிர்த்து நிற்பவன் வெற்றி பெறுவான் என சொல்லப்படுகிறது. அர்ஜுனாவின் பக்தியை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் அவன் முன்னே வேட்டைக்காரனாக காட்சியளிக்க, பார்வதி வேட்டைக்காரியாகவும் காட்சியளித்ததாக சொல்லப்படுகிறது.

சிவன் தனது வேட்டையை இந்திரக்கீழா மலையின் காட்டுப்பன்றியை வேட்டையாட தொடங்க, இங்கே தான் அர்ஜுனன் தவம் புரிந்தாராம். அந்த பன்றியானது அர்ஜுனனை நோக்கி ஓடிவர, அதனை நோக்கி அம்பை அர்ஜுனன் எய்த, அதே நேரத்தில் சிவனும் அம்பை எய்திருக்கிறார். சிவனும் அர்ஜுனனும் நான் தான் பன்றியை கொன்றேன் என மாற்றி மாற்றி வார்த்தை தகறாரில் ஈடுபட தொடங்கினர்.

PC: Offical Site

பசுபத்தஷ்த்ரா:

பசுபத்தஷ்த்ரா:


இந்த வார்த்தை சண்டையானது முற்றுப்பெற, அர்ஜுனா களிமண் கொண்டு சிவலிங்கத்தை உருவாக்கிட அதனை வழிபட்டும் வந்தார். அப்போது மலரை கடவுளுக்கு காணிக்கையாக்க அந்த மலரானது வேட்டைக்காரன் மேலே விழ அவர் அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான் அவருக்கு புரிந்தது. அந்த வேட்டைக்காரன் வேறு யாருமல்ல சிவன் என்றும் வேட்டைகாரி தான் பார்வதி என்றும். உடனே சிவனும், பார்வதியும் தங்களுடைய உண்மை வடிவத்திற்கு மாற, பசுபத்தஷ்த்ராவும் அர்ஜுனனுக்கு கொடுக்கப்பட்டு ஆசிர்வதிக்கவும் பட்டது.

PC: Krishna Chaitanya Velaga

இந்த ஆலயத்தின் நவராத்திரி:

இந்த ஆலயத்தின் நவராத்திரி:


இந்த ஆலயமானது அழகிய தேவி சிலைக்கு வீடாக விளங்க, 4 அடி உயரமும், சிறந்த அணிகலன்களையும் கொண்டு வடிவமைக்கட்டும் உள்ளது. துர்கா தேவியவள் எட்டு கரங்களை கொண்டு அவதாரமெடுக்க, மஹிசாசுராவை நோக்கி அவள் ஆயுதத்தை ஏந்துக்கொண்டும் அவளுடைய தந்திரம் வெளிப்பட நிற்கிறாள்.

மற்ற தேவி ஆலயங்களைக்காட்டிலும், இங்கே நவராத்திரியானது முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த தெய்வமானது வித்தியாசமான வெளிப்பாடுகளில் இவ்விழாவில் காணப்பட, இந்த ஆலயமானது இலட்சக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்த்திட, இந்த சிறப்பான நாட்களில் தேவியின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைத்திடக்கூடும்.

PC: Krishna Chaitanya Velaga

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X