Search
  • Follow NativePlanet
Share
» »போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!

போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!

இந்தியாவின் கண்டுபிடிக்கப்படாத டாப் 10 புதையல்கள் - பகுதி 1

16 அடி தோண்டியவன் வெறுங்கையுடன் சென்றான். 4 அடி தோண்டியவன் குபேரனானான் என்பார்கள். அப்படி கடினப்பட்டு ஒரு வேலையைச் செய்து இடையில் விட்டவன் ஏமாந்து போவான். முயற்சிப்பவன் மட்டுமே பலனைப் பெறுவான்.

----------------------------------------------------------------------------------------------

இந்த கோடையில் பயணம் மேற்கொள்ளுங்கள்:

----------------------------------------------------------------------------------------------

இதை ஏன் இப்போ சொல்றேன்னா.. இந்த கட்டுரை புதையல்களைப் பற்றியது. இதுவரை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட அல்லது கணக்கெடுக்கப்பட்ட கைப்பற்றப்படாத புதையல் களின் மதிப்பையும், அவை உள்ள இடங்களையும் பற்றி அறிய இந்த கட்டுரை உங்களுக்கு உதவும்.

இந்த புதையல்களெல்லாம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த புதையலைத் தேடி சென்ற பலர் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். மீதி சிலர் உயிரிழந்துள்ளனர்.

புதையல் இருக்கும் இடங்களிலெல்லாம் மரணத்திற்கான அழிவுப்பாதையும் இருக்கும் என்பது முற்கால நம்பிக்கை. உயிரை துச்சமென நினைத்து சென்றால் மட்டுமே இந்த புதையல்கள் கிடைக்குமாம். இந்த புதையல்கள் மறைந்துள்ள இடங்களை இப்போது நாம் காணலாம் வாருங்கள்.

மூகாம்பிகை கோயில், கொல்லூர்

மூகாம்பிகை கோயில், கொல்லூர்

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் கொல்லூர் அருகே அமைந்துள்ளது இந்த கோயில்.

இந்த கோயிலின் வருமானம் 17 கோடி ரூபாய் ஆகும்.

கடலுக்கடியில் 70 ஆயிரம் கோட்டைகள்! மறைக்கப்படுகிறதா தமிழனின் பெருமைகள்?

புதையல்கள்

புதையல்கள்

இந்த கோயிலில் விலைமதிக்க முடியாத புதையல்கள் இருப்பதாக கூறுகின்றனர் இங்குள்ள சாமியார்கள்.

கோயிலின் ஒரு புறத்தில் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறியீடு ஒன்று உள்ளது.

Premkudva

https://kn.wikipedia.org/wiki/%E0%B2%95%E0%B3%8A%E0%B2%B2%E0%B3%8D%E0%B2%B2%E0%B3%82%E0%B2%B0%E0%B3%81_%E0%B2%AE%E0%B3%82%E0%B2%95%E0%B2%BE%E0%B2%82%E0%B2%AC%E0%B2%BF%E0%B2%95%E0%B2%BE_%E0%B2%A6%E0%B3%87%E0%B2%B5%E0%B2%B8%E0%B3%8D%E0%B2%A5%E0%B2%BE%E0%B2%A8#/media/File:Kollur_Mookambika_Temple_20080123.JPG

புதையல்

புதையல்


அந்த குறியீடு அந்த கோயிலில் பெரும்மதிப்பு கொண்ட புதையல் ஒன்று இருப்பதாக குறிக்கிறது என்கின்றனர் முனிவர்கள்.

அந்த புதையல் வெளிஉலகத்துக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் அவர்கள்.

மூகாம்பிகை சிலை

மூகாம்பிகை சிலை

இந்த புதையல்களின் மொத்தமதிப்பும் சேர்த்தால் 100 கோடியைத் தாண்டும் என்கின்றனர்.

இந்த கோயிலின் தாய் மூகாம்பிகை சிலையின் முகம் முழுவதும் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டது. அதை விஜயநகர பேரரசர் வழங்கியதாக வரலாறு கூறுகிறது.

கிருஷ்ணா ஆறு புதையல்கள்

கிருஷ்ணா ஆறு புதையல்கள்

உலகின் தலைசிறந்த வகை வைரக்கற்கள் அடங்கிய புதையல் ஒன்று கிருஷ்ணா நதியின் கிளையாற்றில் இருக்கிறது.

கோல்கொண்டா பேரரசு இந்த புதையலை கொண்டிருந்ததாக கூறப்படுவதுண்டு.

உலகப் பிரசித்தி பெற்ற கோகினூர் வைரம்

உலகப் பிரசித்தி பெற்ற கோகினூர் வைரம்

இப்போதும்கூட அந்த புதையல் அங்குதான் இருக்கிறதாம்.

உலகப் பிரசித்தி பெற்ற கோகினூர் வைரம் இந்த புதையல்களிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.

இந்த ஆற்றின் அடியில் மிகப்பெரிய வைரப் பாறை இருக்கலாம் என கருதப்படுகிறது.

Zeman

சார்மினார் சுரங்கம் ஹைதராபாத்

சார்மினார் சுரங்கம் ஹைதராபாத்

கோல்கொண்டா கோட்டையையும் சார்மினாரையும் இணைக்கும் மிகப்பெரிய சுரங்கம் ஒன்று இருப்பதாகவும், அது தற்போது மாயமாகிவிட்டதாகவும் தெரிகிறது.

அந்த சுரங்கத்தில் சில மறைக்கப்பட்ட புதையல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சுரங்கம் எங்கு இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், புதையலை எடுக்க அங்கே செல்லமுடியாது

ஹைதராபாத் நிஜாம்

ஹைதராபாத் நிஜாம்

ஹைதராபாத் நிஜாம் அப்படியொரு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அந்த சுரங்கத்தைக் கட்டியுள்ளனர்.

ஏதாவது அவசர காலத்தின்போது ராஜ வம்சத்தினர் மற்றும் முக்கிய படைத்தலைவர்கள் செல்ல மட்டுமே இந்த சுரங்கம் பயன்படுத்தப்பட்டது.

1936ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள், நிஜாம் மிர் உஸ்மான் அலி என்னும் நிசாம் அவர்களின் உத்தரவுப்படி அரச குடும்பத்தைச் சாராத எவர்க்கும் தெரியபடுத்தப்படவில்லை.

Bernard Gagnon

100 லட்சம் கோடி மதிப்பு

100 லட்சம் கோடி மதிப்பு

அதன்பின்னர் எந்த தகவலும் இதைப் பற்றி வெளியேறவில்லை.

அங்கு 100 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாக இன்னமும் நம்பப்படுகிறது.

Sumeetrajendrabhavsar

நாதிர் ஷா புதையல்கள்

நாதிர் ஷா புதையல்கள்

பெரிசியன் தலைவரான நாதிர் ஷா 1739ல் டெல்லிக்கு 50 ஆயிரம் படைவீரர்களுடன் வந்து தாக்கினார்.

இதனால் அங்கு வாழ்ந்த 30 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர்.

டெல்லி மகாராஜா

டெல்லி மகாராஜா

அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மொத்த பொக்கிஷங்களையும் கடத்திச் சென்றார் அவர்..

தன் படையின் முன் பகுதி தொடங்கி முடியும் வரை அமைந்த கேரவன் கிட்டத்தட்ட 150 மைல் நீளம் இருந்ததாம்.

அப்போ அவங்க கொள்ளையடிச்ச புதையல் எவ்ளோ இருக்கும்.. டெல்லி மகாராஜா எவ்ளோ வச்சிருந்துருப்பாரு.. இன்னமும் மீதி அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

Abol-Hassan

ஷா

ஷா

அப்படி செல்லும்போது மரணமடைந்தார் ஷா. பல்வேறு நபர்களின் கருத்துப்படி அவர் கொண்டு சென்ற புதையல்களை யாருக்கும் தெரியாத வண்ணம் இந்து குஷ் மலையில் பதுக்கி வைத்தாராம்.

இன்னமும் அந்த புதையல்கள் அங்குதான் உள்ளது. வேணும்னா எடுத்துக்கோங்க..

More News

Read more about: travel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+