ராமன் வழிபட்ட ராமேஸ்வரத்தில் உள்ள குளித்தால் பாவங்களின் கழியும் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் முதல் முறையாக அங்கே ஒரு புண்ணியம் விதைக்கப்படவிருக்கிறது. பொட்டல் பூமியான ராமேஸ்வரத்தில் பிறந்து செயற்கரிய தனது செயல்களால் இந்த நாட்டுக்கே பெருமை சேர்த்து, மக்களின் இதயங்களில் என்றென்றைக்கும் வாழப்போகும் அப்துல் கலாம் என்ற புனிதர் தனது இறுதி உறக்கத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
இனிமேல் ராமேஸ்வரத்தின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக கலாம் அவர்களின் நினைவாலயம் திகழும். அதற்க்கு முன்பாக ராமேஸ்வரத்தில் இருக்கும் மற்ற இடங்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சுற்றுலாத் தலங்கள்
இராமேஸ்வரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக பாம்பன் பாலம், ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில், அக்னி தீர்த்தம், தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில் ஆகியவை அறியப்படுகின்றன.
இராமேஸ்வரத்தின் சுற்றுலாத் தலங்கள்
படம் : wishvam

ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில்
12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் புகழ்பெற்றுள்ளது.
படம் : Ryan

தனுஷ்கோடி கடற்கரை
இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையே அமையப்பெற்றுள்ள தனுஷ்கோடி கடற்கரைதான் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நில எல்லையாக இருக்கிறது. இந்தக் கடற்கரை பகுதியில் நீங்கள் ஆக்ரோஷம் மிகுந்த இந்தியப்பெருங்கடல், ஆழமற்ற அமைதியான வங்காள விரிகுடாவுடன் கலக்கும் அற்புதக் காட்சியை பார்த்து ரசிக்கலாம்.
படம்

பாம்பன் பாலம்
பாந்த்ரா-வோர்லி கடற்பாலத்துக்கு பிறகு இந்தியாவின் 2-வது பெரிய கடற்பாலமாகவும், இந்தியாவின் முதல் கடல் பாலமாகவும் 100 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் அறியப்படுகிறது.
இந்தியாவின் நீளமான பாலங்கள்!

அலைகடலும், கோயிலும்!
அலைகடலும், மீன்பிடி படகுகளும், ஸ்ரீ இராமநாதசுவாமி கோயிலும்!
படம் : wishvam

லக்ஷ்மண தீர்த்தம்
இராமேஸ்வரத்தில் உள்ள பல்வேறு தீர்த்தங்களில் லக்ஷ்மண தீர்த்தம் முக்கியமானது.
படம் : poobesh a.k.a ECTOTHERM

தூண்கள்
ஸ்ரீ இராமநாதசுவாமி கோயிலின் உள்ளே வரிசையாகவும், அலங்கார வடிவமைப்புகளுடன் அமைந்துள்ள தூண்கள்.
படம் : madhan r

கலங்கரை விளக்கு
இராமேஸ்வரத்தில் உள்ள கலங்கரை விளக்கு.
படம் : BOMBMAN

ராமர் பாதம்
ராமர் பாதத்துக்கு அழைத்துச் செல்லும் படிகள்.
படம் : Arun

தனுஷ்கோடி கிராமம்
பாம்பன் தீவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள தனுஷ்கோடி கிராமம்.
படம் : Ryan

ரயில் செல்லும் காட்சி
பாம்பன் பாலத்தின் மீது ரயில் செல்லும் காட்சி.
படம் : Ashwin Kumar

உத்திரகோசமங்கை
உத்திரகோசமங்கை தமிழ்நாட்டின் பழமையான சிவன் கோயில்களில் ஒன்று.
படம் : madhan r

மீன்பிடி படகு
இராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் மீன்பிடி படகு.
படம் : wishvam

பாம்பன் ரயில் நிலையம்
பாம்பன் ரயில் நிலையத்தின் வண்ணமயமான தோற்றம்.
படம் : wishvam

சூரிய உதயம்
சூரிய உதயத்தின்போது தனுஷ்கோடி கடற்கரை.
படம் : Earth-Bound Misfit, I

பயணிகள் கூட்டம்
இராமேஸ்வரம் கடற்கரையில் காணப்படும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்.
படம் : Tamil1510

கடந்து செல்லும் படகு
பாம்பன் பாலத்தின் அடியே, அதை கடந்து செல்லும் படகு.
படம் : ASIM CHAUDHURI

கடைகள்
ராமர் பாதம் அருகே நாவற்பழம், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் போன்றவை விற்கும் கடைகள்.
படம் : Amirthanarayanan Rajaravi

டெம்போ ட்ராவல்
தனுஷ்கோடி கடற்கரையில் சிறிய டெம்போ ஒன்றில் செல்லும் பயணிகள் மற்றும் ஊர் மக்கள்.
படம் : tlongacre

பத்ரகாளியம்மன் கோயில்
பாம்பனில் உள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில்.
படம் : tlongacre

அதிகாலை நீராடல்
இராமேஸ்வரம் கடற்கரையில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் கடலில் புனித நீராட காத்திருக்கும் பக்தர்கள் மற்றும் பயணிகள்.
படம் : tlongacre

படகுத்துறை
இராமேஸ்வரம் படகுத்துறையில் காணப்படும் மீன்பிடி படகுகள்.
படம் : wishvam

சிதைவுகள்
தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் காணப்படும் சிதைவுகள்.
படம் : Ashwin Kumar

மீன்பிடி படகுகள்
இராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் படகுகள்.
படம் : BOMBMAN

நாகசிற்பங்கள்
கோதண்டராமர் கோயில் வளாகத்தில் காணப்படும் நாகசிற்பங்கள்.
படம் : Nsmohan

கோயில் தேர்
ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் தேர்.
படம் : Nsmohan

பாலத்தின் தோற்றம்
100 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தின் உட்புறத் தோற்றம்.
படம் : Armstrongvimal

கோவேறிக்கழுதைகள்
தனுஷ்கோடி கடற்கரையில் காணப்படும் கோவேறிக்கழுதைகள்.
படம் : Armstrongvimal

ஜோதிர்லிங்கம்
12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான
ஸ்ரீ இராமநாதசுவாமி கோயிலின் ஜோதிர்லிங்கம்.
படம் : Ramnathswamy2007

ரயில்பாலமும், தரைப்பாலமும்!
பாம்பன் பாலங்களான ரயில்பாலமும், தரைப்பாலமும்!
படம் : ShakthiSritharan

தேவாலய சிதைவுகள்
தனுஷ்கோடி கடற்கரையில் உள்ள பழமையான தேவாலயம் ஒன்றின் சிதைவுகள்.
படம் : Armstrongvimal

புனித நீராடல்
இராமேஸ்வரம் கடலில் புனித நீராட பசுக்களை அழைத்து வரும் பக்தர்கள்.
படம் : Nsmohan

மிதக்கும் கல்
இதுபோன்ற மிதக்கும் கற்களைக் கொண்டுதான் இராமாயண காலத்தில் இராமர் பாலம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
படம் : Arunkumarbalakrishnan

பூசாரி
இராமேஸ்வரம் கடற்கரையில் தவசம் உள்ளிட்ட காரியங்கள் செய்யும் பூசாரி.
படம் : Ravindraboopathi

இராமேஸ்வரத்தை எப்படி மற்றும் எப்போது அடையலாம்?
எப்படி அடைவது?
எப்போது பயணிக்கலாம்?
படம் : Purshi



Click it and Unblock the Notifications




