Search
  • Follow NativePlanet
Share
» »சுகப்பிரசவம் ஆகவேண்டுமா அப்போ இந்த கோயிலுக்கு போங்க!

சுகப்பிரசவம் ஆகவேண்டுமா அப்போ இந்த கோயிலுக்கு போங்க!

இத்தலத்தின் அம்மனான குங்குமவல்லி தாயாருக்கு ஆண்டுக்கு இரு முறை வளைகாப்பு நடத்தப்படுகிறது

தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் சிவபெருமான் காட்சியருளும் தலமாகும்.

இந்த கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டியன் வரகுணனால் கட்டப்பட்டது.

இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக தான்தோன்றீஸ்வரர் அருள்பாலிக்கிறார். 11ம் நூற்றாண்டில் கபிலர் பாடிய பாடலிலும் இடம்பெற்றுள்ள இக்கோயிலில் சோழர் கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

சிவனின் தேவாரம் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

இச்சிவாலயத்தின் மூலவர் தான்தோன்றீஸ்வரர் என்றும், அம்பிகை குங்குமவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவில் குங்குமவல்லி தாயார் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோவில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்தமையாகும்.

உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் எனும் மன்னன், இந்திரனின் அனுமதியோடு நாக கன்னையான காந்திமதியை மணம்புரிந்தார். காந்திமதி சிறந்த சிவபக்தை. அவர் கற்பவதியாக இருக்கும் போது மலைக்கோட்டை தாயுமானவரை தரிசிக்க எண்ணம் கொண்டார். அதற்காக புறப்பட்டு செல்கையில் அவர் உடல் சோர்வுற்றது. இறைவனை காண முடியாமல் தன்னுடைய உடல் வாட்டுகிறதே என்றெண்ணி கண்ணீர் விட்டு வேண்டினார். அவருடைய பக்தியில் மனமிறங்கி சிவபெருமான் தாயுமானவராக அவருக்கு காட்சியளித்தார்.

உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்

உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்


முதல் நாள் - கர்ப்பிணிகள் அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களை காணிக்கையாக தருவர். இரண்டாம் நாள் - திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு கிடைக்க வளையல்களை காணிக்கையாக தருவர். மூன்றாம் நாள் - திருமண தடை, ஜாதக தோசம் உள்ளவர்கள் வளையல்களை காணிக்கையாக தருவர்.

இந்த மூன்று நாட்களிலும் பூசைக்குப் பின்னர் காணிக்கையாக கொடுத்த பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக தரப்படும்.

PC: Ssriram mt

தோஷம்

தோஷம்


களத்ரதோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், திருமண தடை நீங்கவும், சந்தானபாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் உண்டாகவும், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்காக வளைகாப்பில் பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

PC: Ssriram mt

வளைகாப்பு

வளைகாப்பு

இத்தளத்தின் அம்மனான குங்குமவல்லி தாயாருக்கு ஆண்டுக்கு இரு முறை வளைகாப்பு நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் தை 3வது வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மூன்று நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

PC: Ssriram mt

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

முதல் நாள் - கர்ப்பிணிகள் அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களை காணிக்கையாக தருவர். இரண்டாம் நாள் - திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு கிடைக்க வளையல்களை காணிக்கையாக தருவர். மூன்றாம் நாள் - திருமண தடை, ஜாதக தோசம் உள்ளவர்கள் வளையல்களை காணிக்கையாக தருவர்.

இந்த மூன்று நாட்களிலும் பூசைக்குப் பின்னர் காணிக்கையாக கொடுத்த பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக தரப்படும்.

PC: Ssriram mt

திருமண தடை நீங்க

திருமண தடை நீங்க

களத்ரதோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், திருமண தடை நீங்கவும், சந்தானபாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் உண்டாகவும், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்காக வளைகாப்பில் பெண்கள் கலந்துகொள்கின்றனர்.PC: Ssriram mt

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள உறையூர் எனும் பகுதியில் உள்ள சிவாலயமாகும்.

இங்கு செல்வதற்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெரம்பலூர், தஞ்சாவூர் முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

நன்றி

நன்றி

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள். Laughing

இத்தளத்தின் அம்மனான குங்குமவல்லி தாயாருக்கு ஆண்டுக்கு இரு முறை வளைகாப்பு நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் தை 3வது வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மூன்று நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

More News

Read more about: travel temple பயணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+