கர்நாடகாவின் கர்வார் கடற்கரையில் காணப்படும் சிறு நகரம் தான் கொகர்னா. இந்த நகரமானது முன்னர் எண்ணற்ற ஆலயங்களுக்கும், யாத்ரீக தளத்திற்கும் வீடாக விளங்க, கடற்கரை பிரியர்களுக்கு இவ்விடம் விடுமுறைக்கு ஏற்றதாக அமையக்கூடும். யாரும் தொட்டிராத, தூய்மையான மணற்பரப்பும், நீல நிற நீரும் என இவ்விடமானது பல சுற்றுலாப்பயணிகளையும் ஈர்த்திட, அந்த நேரமானது திரும்ப பெற இயலாத பொன்னான நேரமாகவும் அமைகிறது. கொகர்னா தற்போது நகரமாக விளங்க, கடற்கரைகளும், யாத்ரீக தளமுமென சுற்றுலா பயணிகளின் மனதை பெரிதும் ஈர்க்கும் விதமாகவும் அமைகிறது.
கொகர்னாவை இலக்கிய ரீதியாக "மாட்டின் காது" என அழைக்கப்பட, உள்ளூர் வாசிகளால் இப்பெயர் கிடைக்க பெற்றதாகவும் தெரியவர, சிவபெருமான் ஒரு காளையிலிருந்து வெளிப்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது. கங்காவளி நதி மற்றும் ஆகானஷினி நதியின் சங்கமமாக இவ்விடம் காணப்படுகிறது. இங்கே எண்ணற்ற ஆலயங்கள் பார்ப்பதற்கு காணப்பட, கடற்கரையும் ஓய்வுக்கு ஏற்றதாக அமையக்கூடும் என்பதோடு, சிறந்த வார விடுமுறை இடமாகவும் இவ்விடமானது அமைகிறது.
கோகர்னாவை நாம் காண சிறந்த நேரங்கள்:
கோடைக்காலமும், பருவமழைக்காலமும் என நவம்பர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் கொகர்னாவை நாம் ரசிக்க ஏதுவாக அமைகிறது. கொகர்னாவின் ஆலயமானது சிவராத்திரி மற்றும் கணேஷ் சதுர்த்தி விழாவின்போது சிறப்புடன் காணப்படுகிறது.
பெங்களூருவிலிருந்து கொகர்னாவுக்கு செல்லும் வழி:
வழி 1: CNR ராவோ கீழ்வழி/ CV ராமன் சாலை. - தேசிய நெடுஞ்சாலை 48 - சிர்ஸி ஹவேரி சாலை. - வெளியே தேசிய நெடுஞ்சாலை 48 - சிர்ஸி - கும்தா சாலை. - தேசிய நெடுஞ்சாலை 66 - கொகர்னா சாலை - கொகர்னா (485 கிலோமீட்டர் - 8 மணி நேரம் 15 நிமிடங்கள
வழி 2: CNR ராவோ கீழ்வழி/ CV ராமன் சாலை. - தேசிய நெடுஞ்சாலை 75 - அர்சிகேரி - பர்கூரின் மைசூரு சாலை - தேசிய நெடுஞ்சாலை 69 - சித்தாப்பூர் - தளகுப்பா சாலை. - சிர்ஸி - கும்தா சாலை. - தேசிய நெடுஞ்சாலை 66 - கொகர்னா சாலை. - கொகர்னா (516 கிலோமீட்டர் - 10 மணி நேரங்கள்)
கொகர்னாவுக்கு செல்லும் வழியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியதோர் பார்வை...
தேவராயனதுர்கா:
அனபிடாசரி அல்லது கரிகிரி மலை என அழைக்கப்படும் தேவராயனதுர்கா மலை, பெங்களூருவிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த மலையானது பயணத்திற்கு ஏற்றதாக புகழ்பெற்று அமைகிறது. இவ்விடத்திற்கான பயணமாக பல்வேறு விதமானது அமைய, எளிதானது முதல் மிதமானது வரையாகவும் அது அமையக்கூடும்.
ஒரு வழியானது காணப்பட, நல்லதொரு முறையில் எளிதான வழியிலும் காணப்பட, இந்த பயணத்தில் புதர்களும், குட்டை செடிகளும் அடங்கும். இங்கே நம்மால் சப்பாத்தி கள்ளி தாவரத்தையும், சோம்பல் கரடிகளையும் கூட பார்த்திட முடியும்.
தேவராயனதுர்கா இரு அழகிய ஆலயங்களுக்கு வீடாக விளங்க, அவை யோக நரசிம்மா மற்றும் போக நரசிம்மா எனவும் அழைக்கப்பட; ஒன்று உச்சியிலும்., மற்றுமொன்று அடிவாரத்தின் அருகாமையிலும் காணப்படுகிறது.
சித்ரதுர்கா:
பாரம்பரியத்தின் நிலமாக சித்ரதுர்கா காணப்பட, பெரும்பாலும் சாலுக்கிய வம்சத்திலிருந்து காணப்படவும்கூடும். இந்த நகரமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக காணப்பட, சந்திரவள்ளி மற்றும் சித்ரதுர்கா கோட்டையையும் அது கொண்டிருக்கிறது.
சந்திரவள்ளியின் அகழ்வாராய்ச்சியில் நாணயமும் மற்றும் பிற தொல்பொருட்களும் காணப்பட, அவை வம்சத்தின் பலரது ஆட்சியையும் காட்டிட, அதனால் இவ்விடமானது தொல்பொருள்துறை தளமாகவும் விளங்குகிறது. சந்திரவள்ளியின் அடித்தள குகைகளானது சுற்றுலா தளமாக அமைகிறது. அடி நிலத்திலிருந்து 80 அடி அவ்விடம் கீழ் செல்ல, இக்குகையானது அங்காளி மடத்தினை ஆலயமாகவும் கொண்டிருக்கிறது. ஏரியானது அருகாமையில் காணப்பட மேலும் அவ்விடத்திற்கு அழகையும் அது சேர்க்கிறது.
சித்ரதுர்கா கோட்டையானது பல வம்சத்தால் கட்டப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டு ஆட்சி செய்யப்படுகிறது. இதனை உள்ளூர் வாசிகளால் ‘கள்ளினா கோட்டே' என அழைக்க, இந்த அழகிய கோட்டையில் மாளிகைகள், கிடங்குகள், எண்ணற்ற ஆலயங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.
மலையும், குகையும், ஏரியும் காணப்பட, சித்ரதுர்காவில் நாம் பார்க்க வேண்டிய இடமாக சந்திரவள்ளியானது அமையக்கூடும்.
தவங்கேரியின் பென்னே தோசை:
நீங்கள் கர்நாடக பகுதிக்கு வந்தால், ஒட்டுமொத்த மாநிலத்தாலும் விரும்பப்படும் சிறந்த உணவாக இது அமைய! மிகவும் புகழ்பெற்ற, சூப்பரான சுவையூட்டும் உணவாக பென்னே தோசையானது காணப்பட, இவ்விடத்தில் தான் இதன் ருசி முற்றிலும் நம் நாவை சுழற்றவும் செய்கிறது. அதனால், தவங்கேரியில் நிறுத்த மறந்திடாமல், சுவையான பென்னே தோசையையும் வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள்.
எண்ணற்ற ஆலயங்களுக்கு தவங்கேரி வீடாக விளக்க, ஹரிஹரேஷ்வர ஆலயத்தையும், துர்காம்பிகை ஆலயத்தையும் நாம் தவறாமல் காண வேண்டிய சிறப்பான இடங்களாக அமையக்கூடும்.
ரானேபென்னூர் கலைமான் சரணாலயம்:
தவங்கேரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது ரானேபென்னூர் கலைமான் சரணாலயத்தில் பெரிய அளவிலான கலைமான்களும் கிருஷ்ணமுருகரும் மாநிலத்தில் காணப்பட, இப்பகுதியில் 6000 கலைமான்களும் காணப்பட! இந்த சரணாலயமானது அடர்ந்து காணப்பட, யூகலிப்டஸ் தோட்டத்தையும் கொண்டிருக்க, குள்ள நரி, நீண்ட வாள் உடைய குரங்குகள், நரி என பலவும் இங்கே காணப்படுகிறது.
சிறந்த இந்திய வகை பறவை காணப்பட, அது அழிந்துக்கொண்டிருக்கும் இனமாகவும் அமைய, ரானேபென்னூர் கலைமான் சரணாலயத்திலும் அது காணப்படுகிறது.
ஹவேரியின் ஆலயம்:
முன்னே யாத்ரீக தளமானது ஹவேரியில் காணப்பட, கொகர்னாவை அடையும் முன்னே நாம் இவ்விடத்தை அடைய! இந்த நகரமானது பல தெய்வங்களை கொண்டு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. ஹுக்கேரி மடம், தரகேஷ்வர் ஆலயம், கடம்பேஷ்வர் ஆலயம், சித்தேஷ்வர ஆலயம், நாகரேஷ்வர ஆலயம் என பல ஆலயங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகிறது.
பங்கபுரா மயில் சரணாலயமானது ஆலயங்களை கடந்து ஹவேரியில் புகழ்மிக்க இடமாக காணப்படுகிறது. மயில்களை பாதுகாக்கும் சரணாலயங்களுள் ஒன்றாக இது காணப்பட, இந்த சரணாலயமானது மற்ற பறவையினமான பச்சைக்கிளி, மீன் கொத்திகள், புள்ளி மரங்கொத்தி என பலவற்றிற்கு வீடாகவும் விளங்குகிறது.
சிர்ஸியின் நீர்வீழ்ச்சி:
ஹவேரியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நகரம் தான் சிர்ஸி. இந்த நகரத்தில் சில ஆலயங்கள் காணப்பட, அவை மதுகேஷ்வரா மற்றும் மரிகாம்பா ஆலயம் எனவும் அழைக்கப்பட, எண்ணற்ற நீர்வீழ்ச்சியையும் கொண்டிருக்க, சிர்ஸியிலிருந்து சராசரியாக 50 முதல் 60 கிலோமீட்டர் அருகாமையிலும் இது காணப்படுகிறது. உஞ்சள்ளி வீழ்ச்சி, சத்தோடி வீழ்ச்சி, பென்னே ஹோலி வீழ்ச்சி என அருகில் காணப்பட, அவற்றுள் மிகவும் புகழ்மிக்க வீழ்ச்சியாக சிர்ஸி காணப்படுகிறது.
அழகிய நீர்வீழ்ச்சியான உஞ்சள்ளி வீழ்ச்சியானது மேற்கு தொடர்ச்சியின் சஹயாத்ரி மலையில் காணப்படுகிறது. இவ்விடமானது ஆகானாஷினி நதியை உருவாக்கிட, 116 மீட்டர் உயரத்திலும் அது விழுகிறது.
கொகர்னாவின் கடற்கரை:
நீங்கள் இறுதியாக இலக்கை எட்ட, கொகர்னா! கடற்கரைகளை கொண்டிருப்பதோடு கவர்ச்சியால் நம்மை கவர, சிறந்த நேரமாகவும் அது நமக்கு அமையக்கூடும். தங்க நிற மணல், நீல நிற தூய்மை நீர், என சூரிய வெளிச்சமும் நம் உடலை சிலிர்க்க செய்ய மனதையும் மறைத்துக்கொண்டு தேடவைக்கிறது.
அயல் நாடு மற்றும் இந்திய சுற்றுலாவின் ஒட்டுமொத்த ஈர்ப்பாக ஓம் கடற்கரை அமைகிறது. இந்த கடற்கரையின் வடிவத்தால் இப்பெயர் கிடைத்திட, அது ஓம் குறியை ஒத்த அழகுடன் வடிவமைந்திருக்கிறது.
குடுல் கடற்கரை, சொர்க்க கடற்கரை, கொகர்னா கடற்கரை என மற்றும் பல புகழ்மிக்க கடற்கரை கொகர்னாவில் காணப்படுகிறது.
உலாவல் மற்றும் ஸ்னோர்கெல்லிங்க்:
சாகச பிரியராக நீங்கள் இருப்பின், எண்ணற்ற நீர் விளையாட்டுக்களை இந்த கொகர்னா கொண்டிருப்பது உற்சாகத்தை தந்திடும். உலாவல் ஒரு செயலாக அமைய, உலாவலுக்கான கத்துக்குட்டிகளுக்கான பயிற்சி மையங்களும் இங்கே காணப்படுகிறது. உலாவில் கியர்களும் இங்கே காணப்படுகிறது.
ஸ்னோர்கெல்லிங்க் கடலில் பிரிந்து காட்சியளிக்க, தண்ணீருக்கு அடியில் ஒரு புது உலகத்தை நாம் கண்ணால் கண்டு அனுபவத்தையும் கொள்ள! இந்த டைவ் என்பது பதினைந்து அடியை காட்டிலும் காணப்பட, அழகிய பவளப்பாறையும் நம் கண்களை வெகுவாக கவர்வதோடு, கடல் அர்சின்ஸ், தேவதை மீன்களும் காணப்பட! நீங்கள் அதிர்ஷ்ட சாலியாக இருப்பின், நீந்தி செல்வதோடு கடல் ஆமைகள் அல்லது திமிங்கலத்தையும் பார்த்திடக்கூடும்.
பனிச்சறுக்கு மற்றும் பாராசைலிங்க்:
உலாவல் அல்லது ஸ்னோர்கெல்லிங்கினால் நீர் விளையாட்டு முடிவற்று இருக்க, கொகர்னாவில் இதனை தவிர்த்து நம்மால் பலவற்றையும் காண முடிகிறது. பனி சறுக்கு என்பது நீரில் மிதந்துக்கொண்டிருக்கும் வாழை இலையில் நாம் பயணம் செய்வதாக அமைய! நீங்கள் இனிமையான அலைகளினில் உல்லாசமாக இருக்க, 15 முதல் 20 நிமிடங்கள் வரையில் நம்மால் கடல் உப்பினையும் உணர முடிகிறது.
பாராசைலிங்கினால் வலிமையான அட்ரினலின் சுரப்பது அதிகரிக்க! வேகப்படகுடன் 300 அடி கயிறும் இணைக்கப்பட்டிருக்க, மற்றுமொரு இணைப்பானது பாராசூட்டுடன் இணைத்தும் காணப்படுகிறது. அது வானத்தில் வேகமாக பறக்க, கடல் நோக்கியும் படகானது வேகமாக செல்ல! இருப்பினும், அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் மட்டும் பாராசைலிங்க் காணப்படுகிறது.
கொகர்னா ஆலயம்:
வரையறுக்கப்பட்டது போல், புகழ்பெற்ற ஆலயங்களுக்கு வீடாக கொகர்னா விளங்க, மஹாபலேஷ்வர ஆலயம், மகா கணபதி ஆலயம், தம்ரா கௌரி மற்றும் வெங்கட்ராமன ஆலயமும் என நான்கு முக்கியமான ஆலயங்கள் காணப்பட, அவை நாம் பார்க்க வேண்டிய ஆலயங்களாகவும் அமையக்கூடும்.
மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக மஹாபலேஷ்வர ஆலயம் காணப்பட, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. இந்த ஆலயமானது திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்க, சிவபெருமானின் கற் சிற்பமானது காணப்பட, அது 1500 வருடங்களுக்கு பழமை வாய்ந்தது எனவும் தெரியவருகிறது.