உதய்பூரின் அழகிய ஏரிகள் நகரத்தினை தழுவி காணப்படும் இந்த பிச்சோலா ஏரியானது செயற்கை தூய நீரைக்கொண்டு காணப்பட, பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது உருவாகியதாக தெரிய வருகிறது. இந்த ஏரியை மலைகள், மாளிகைகள், ஆலயங்கள் சூழ்ந்திருக்க, 4 கிலோமீட்டர் நீளமும், 3 கிலோமீட்டர் அகலமும் கொண்டு காணப்பட, பருவமழைக்காலத்தின்போது இதன் ஆழமானது அதிகரிக்கவும் செய்கிறது.
இந்த பிச்சோலா என்னும் வார்த்தைக்கு 'கொல்லைப்புறம்' என அர்த்தமாகும். இந்த கிராமம் அருகில் ஏரி இருந்ததாலே இந்த நதியானது இப்பெயர் பெற்றது. இரண்டு தீவுகள் இந்த ஏரியில் காணப்பட, அவற்றின் பெயர் ஜாக் நிவாஸ் மற்றும் ஜாக் மந்திர் என்றழைக்கப்பட்டது. லீலா அரண்மனை கெம்பின்ஸ்கை, ஓபுராய் உதைவிலாஸ், பத்தேஹ் ப்ரகாஷ், மற்றும் ஷிவ் நிவாஷ் என நான்கு பணக்கார ஓட்டல்களை இந்த தீவில் கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டு தீவுகள் காணப்பட, அதனை மோகன் மந்திர் மற்றும் ஆர்சி விலாஸ் என்றழைப்பதோடு, இந்த ஏரியில் அவை காணப்படுகிறது. பிச்சோலா ஏரியின் ஆற்றங்கரையில் இது காணப்படுவதோடு, இந்த கட்டப்பட்ட அரண்மனையை நகரத்து அரண்மனை என்றும் அழைக்கின்றனர். இப்பேற்ப்பட்ட மாபெரும் அரண்மனைகள் பல காணப்பட, இந்த ஏரியின் உள் மற்றும் சுற்றுபுறங்களில் அவை காணப்படுகிறது. திரைப்பட இயக்குனர்களின் கண்களை கொள்ளைக்கொண்ட இவ்விடம், இன்று பல படப்பிடிப்புகளுக்கு முக்கிய இடமாக விளங்குகிறது.
பிச்சோலா ஏரியானது மஹாரானா லாகா அரசின் கீழ் பிச்சு பஞ்சாரா, பஞ்சாரா பழங்குடி மனிதர்களால் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த ஏரியானது மஹாராஜ உதை சிங்கினால் விரிவுப்படுத்தப்பட, இதன் கொள்ளை அழகால் கவர்ந்த பசுமைகாட்சிகளால் மனம் மயங்கி, படிப்போல் எனப்படும் கட்டிடத்தை கல் கொண்டு கட்டிருக்கிறார் என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

ஜக் நிவாஷ் தீவு:
தாஜ் ஹோட்டல் குழுமத்தால் இன்று எடுத்து நடத்தப்படும் இவ்விடத்தை ஏரி அரண்மனை என்றழைப்பர். ஜக் நிவாஷ் தீவை ஒட்டுமொத்தமாக இது சூழ்ந்து காணப்பட, மஹாராஜ ஜகத் சிங்கின் வழியில் 1743 மற்றும் 1746 இல் இது கட்டப்பட்டது தெரிய வருகிறது. மேவர் வம்சத்தின் கோடைக்கால அரண்மனையாக இவ்விடம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த கிழக்கு நோக்கிய அற்புத அரண்மனை, 250 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்து காணப்பட, இதனை வெள்ளை பளிங்கு கற்கள் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடமானது அழகிய காட்சிகளால் கண்களை வெகுவாக கவர, ரொமான்டிக் விடுமுறைக்கு ஏற்ற அழகிய இடமாக இது அமைகிறது. இங்கே காணப்படும் இன்னும் சில முக்கிய அரண்மனை ஈர்ப்புகளாக சீஷ் மஹால், மோர் சௌக் மற்றும் கிருஷ்ண விலாஷ் காணப்படுகிறது.

ஜக் மந்திர் தீவு:
குல் மஹால் அரண்மனைக்கு புகழ்பெற்ற இந்த ஜக் மந்திர் தீவு, மஹாராஜ கரன் சிங்கால் கட்டப்பட்டதாகும். இருப்பினும், மஹாராஜ ஜகத் சிங்க் இன்னும் சில நீட்டிப்புகளை செய்ய, இந்த தீவின் பெயரானது போனது. அவர் பெண்களுக்கான அறையை உருவாக்க, அதனை 'ஷெனனா' என்றும் அழைக்கப்பட்டது.
இந்த அரண்மனையில் சர்வதேச ஈர்ப்புகள் முக்கிய பங்கினை வகிக்க, இந்த இடத்தில் தான் ஆக்ஷன் கிங்க் ஜேம்ஸ் பாண்டின் ஆக்டோபுஸ்ஸி படம் எடுக்கப்பட்டது என்றும் தெரியவருகிறது. ஜக் மந்திர், அடைக்கலம் தேடி வருபவர்களின் இடமாக முகலாயா ராஜாவான ஷாஜகானுக்கு பெயர் பெற்று விளங்க, அந்நேரத்தில் அவர் தன்னுடைய தந்தை ஜஹாங்கிருக்கு எதிராகவும் கலகம் புரிந்தார் என்றும் தெரியவருகிறது.
வண்ண கற்கள் மற்றும் முகலாய ஓவியங்களை கொண்டு இந்த இடம் வடிவமைக்கப்பட்டிருக்க, இந்த அரண்மனையானது மஞ்சள் நிற மணல் கற்கள் மற்றும் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது. இந்த இடத்தின் பலவற்றை ஷாஜகானின் தாஜ்மஹாலை முன்னோடியாக வைத்து எடுக்கப்பட, அவை அரண்மனையில் சில இடங்களில் தாஜ்மஹாலையும் பிரதிபலிக்க செய்கிறது.

நட்டினி சாபத்தின் புராணம்:
மேலே எழுப்பப்பட்ட நடைமேடை முற்றத்தில் காண, அதனை 'நட்டினி சபுத்திரா' என்றழைக்கிறோம். இந்த இடமானது தொழில்துறை இறுக்கத்தினால் நடப்பவர்களுக்காக மரியாதை செலுத்த அமைக்கப்பட, இதனை 'நட்டினி' என்றும் அழைக்கின்றனர். ஆம், இவர் தான் அப்போது நிலவிய மஹாரான ஜாவன் சிங்கு என்றும், கிராமத்தை பிணைத்து கயிரானது ஏரியின் மேற்கே காணப்பட, கிழக்கே நகரத்து அரண்மனையை தாங்கிக்கொண்டும் நிற்கிறது. அவர் அரசவையில் பாதியை தர, அது மேவார் வம்சத்துக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.
அவள் மூழ்கடிக்கும் முன்னே கயிற்றால் ஏமாற்றி நறுக்கப்பட்டதாகவும், அதனால் ராஜாவுக்கு அவள் ஒரு சாபமிட, அது நேரடி வாரிசுகள் அவருக்கு ஒரு போதும் இருக்காது என்னும் சாபமெனவும் நமக்கு தெரியவருகிறது. இது உண்மை எனவும் இன்று வரை நம்பப்பட்டு வருகிறது.

பிச்சோலா ஏரியில் நாம் செய்ய வேண்டியவை:
கங்கௌர் தொடர்ச்சி, ஹனுமான் தொடர்ச்சி, லால் தொடர்ச்சி என மூன்று புள்ளிகள் ஏரியை சுற்றிக்காணப்பட, சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயம் இங்கே பெரும் நிகழ்வாக அமைகிறது. படகு சவாரிகள் இங்கே ஏரி முழுவதும் காணப்பட, அரண்மனைகளும், தீவுகளும் கண்கொள்ளா காட்சியாகவும் அமைகிறது. ஒரு நீண்ட நெடிய படகு சவாரி ஜாக் மந்திர் அரண்மனையில் நிறுத்தப்பட, அக்கோட்டையின் அழகையும் நாம் மேலும் ரசிக்கிறோம்.
ஒரு மணி நேர ஜாக் மந்திர் சவாரிக்கு 325 ரூபாய் வயது வந்தவர்களுக்கு வாங்கப்பட, 165 ரூபாய் குழந்தைகளுக்கும் வாங்கப்படுகிறது. அரை மணி நேர சவாரிக்கு, வயது வந்தவர்களுக்கு 225 ரூபாயும், குழந்தைகளுக்கு 115 ரூபாயும் வாங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications




