Search
  • Follow NativePlanet
Share
» »கோடை விடுமுறையில் ஏற்காட்டில் ஒரு பட்ஜெட் சுற்றுலா!

கோடை விடுமுறையில் ஏற்காட்டில் ஒரு பட்ஜெட் சுற்றுலா!

ஏழு காடுகளின் நிலம்

"ஏழைகளின் ஊட்டி" என செல்லமாக அழைக்கப்படும் ஏற்காடு தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும். ஏராளமான பசுமைகள் நிறைந்த ஏற்காடுக்கும் சுற்றுலாவிற்குமான தொடர்பு ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே உண்டு எனலாம். கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். இருப்பினும், சுற்றுலாப் பயணிகளிடையே அதிகம் ஆராயப்படாத சுற்றுலாத் தலமாகவும் இது கருதப்படுகிறது. எனவே, ஏற்காடு மலை வாசஸ்தலத்திலும் அதன் அருகாமையிலும் பார்க்க வேண்டிய சில சிறந்த சுற்றுலாத் தலங்கள் என்னென்ன? எப்படி ஏற்காட்டை அணுகலாம்? எப்பொழுது செல்லலாம்? என அனைத்தையும் இங்கே காணலாம்.

ஏற்காட்டில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்

ஏற்காட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சமாக கருதப்படுவது அதன் நடுவே அமைந்துள்ள இயற்கையான ஏரியாகும். இது மிகவும் பிரபலமாக எமரால்டு ஏரி என்று அழைக்கப்படுகிறது.

ஏரியாகும். இது மிகவும் பிரபலமாக எமரால்டு ஏரி என்று அழைக்கப்படுகிறது. அற்புதமான மலைகள் மற்றும் அழகிய தோட்டங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட இந்த ஏரி கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஏரியில் படகு மூலம் சவாரி செய்யும் வசதிகள் நியாயமான கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. உங்கள் தேவை மற்றும் இடைவெளிகளுக்கு ஏற்ப சுயமாக இயக்கப்படும் படகுகள் மற்றும் படகுகளை தேர்வு செய்யலாம். ஏற்காட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சமாக கருதப்படுவது அதன் நடுவே அமைந்துள்ள இயற்கையான.

பகோடா பாயின்ட்

சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைனோசர் திருவிழா – நேரம், தேதி, இடம் மற்றும் கட்டணம்

பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகோடா பாயின்ட் ஏற்காட்டிலியே மிகவும் உயரமான தளமாகும். இவ்விடம் பரந்த காட்சிகளை வழங்குவதால், இதன் உச்சியில் இருந்து ஏற்காட்டின் மொத்த அழகையும் கண்டு களிக்கலாம். பகோடா பாயின்ட்டுக்கு அருகில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் மலைகளின் உச்சியில் இருக்கும் சிறந்த சுற்றுலா அம்சமாகும். சிறந்த இயற்கை காட்சிகளை கண்டு கழிக்க இரவு 7 மணிக்கு முன் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்.

பட்டு பண்ணை மற்றும் ரோஜா தோட்டம்

கோடை விடுமுறையில் ஏற்காட்டில் ஒரு பட்ஜெட் சுற்றுலா!

லேடி சீட்டுக்கு அருகில் அமைந்துள்ள ஏற்காட்டின் பட்டுப் பண்ணை மிகவும் சுவாரஸ்யமான இடமாகும். பட்டுப் பண்ணையைப் பார்வையிடுவது நம் வீட்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். பட்டுப் புழுவின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் பட்டு நூல் நூற்கும் முறைகளை இத்தலத்திற்குச் சென்றாலே புரியும்.

தாவரவியல் பூங்கா

ஏற்காடு சுற்றுலாத் தலங்கள்ஏற்காடு பயண வழ

அற்புதமான மரங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களைப் பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமுள்ள எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் இந்த பூங்கா ஒரு கடவுளின் பரிசு போல காட்சியளிக்கும். புகழ்பெற்ற குறிஞ்சி மலர், 3௦ வகையான ஆர்க்கிட் இனங்கள், அரிதாகக் காணப்படும் தாவரங்கள் என அனைத்தையும் இங்க கண்டு ரசிக்கலாம்.

கிள்ளியூர் நீர்வீழ்ச்சி

ஏற்காடு சுற்றுலாத் தலங்கள்ஏற்காடு

இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும், இந்த 300 அடி உயர நீர்வீழ்ச்சி ஏற்காட்டில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும். இதன் மயக்கும் மற்றும் வசீகரிக்கும் அழகு உங்கள் மனதிலும் இதயத்திலும் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீர்வீழ்ச்சியின் அமைதியானது புத்துணர்ச்சியடைய விரும்புவோர் மற்றும் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களை முறியடிக்க விரும்புவோருக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது.

32-இடங்களாகும்கிமீ லூப் ரோடு, பியர்ஸ் குகை, கொட்டச்சேடு தேக்கு காடு, ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோயில், டிப்பரரி வியூ பாயின்ட், கிரேஞ்ச், மான் பூங்கா, லேடி சீட், அண்ணா பூங்கா, சேர்வராயன் கோயில் ஆகியவையும் ஏற்காட்டில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய மேலும்.

ஏற்காடு சுற்றுலாத் தலங்கள்ஏற்காடு பயண வழ

ஆண்டு முழுவதும் இந்த மலைவாசஸ்தலத்திற்கு செல்ல முடியும் என்றாலும் கூட, கோடை மற்றும் குளிர்காலத்தில் ஏற்காடு செல்வது ஏற்றதாக கருதப்படுகிறது. ஏற்காட்டில் கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்குறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் இங்கு பருவமழை பெய்கிறது. மழைப்பொழிவு காரணமாக, இப்பகுதியில் மலையேற்றம் செய்வதும் மற்ற இடங்களுக்குச் செல்வதும் கடினமாகிறது. ஏற்காட்டில் அக்டோபர் மாதம் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்குறது. இந்த நேரத்தில் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவுவதால் ஏற்காடு செல்ல இது மற்றொரு சிறந்த பருவமாகும்.

ஏற்காட்டில் எங்கே தங்கலாம்

ஏராளமான பட்ஜெட் மற்றும் நடுதரப்பட்ட ஹோட்டல்கள் ஏற்காட்டில் இருப்பதால், இங்கு தங்குவது ஒரு எளிதான விஷயமாகும். உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப அழகிய சுற்றுப்புற காட்சிகள் நிறைந்த அறைகள், தனி பங்களா, காற்றோட்டமான அறைகள் என விரும்பியவற்றை நீங்கள் தேர்வு செய்து தங்கலாம்.

எப்படி ஏற்காடுக்கு செல்வது

பயண வழ

ஏற்காடு தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால், விமானம், ரயில் அல்லது சாலை என அனைத்து போக்குவரத்து முறைகளாலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. எனினும், ஏற்காடு செல்ல சிறந்த வழி விமானம் அல்லது ரயில் பயணம் ஆகும்.
46 கிமீ தொலைவில் அமைந்துள்ள சேலம் விமான நிலையம் ஏற்காடுக்கு அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். பயணிகள் விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்து இலக்கை அடையலாம். இரயில்வேயை முதன்மையான போக்குவரத்து வழியாக விரும்புவோருக்கு, சேலம் சந்திப்பு ஏற்காடுக்கு அருகிலுள்ள இரயில் நிலையமாக செயல்படுகிறது. இரண்டுக்கும் இடையே உள்ள தூரம் 31 கிமீ ஆகும். மலை நகரமான ஏற்காடு மற்ற அண்டை நகரங்களுடனும், சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி போன்ற நகரங்களுடனும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே பேருந்து மார்க்கமாகவும் ஏற்காட்டை அணுகலாம்.
மேற்கண்ட அனைத்தும் ஒன்று சேர்ந்து ஏற்காட்டை சந்தேகத்திற்கு இடமின்றி பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக மாற்றுகிறது. உங்கள் குடும்பம், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் உடனே திட்டமிடுங்கள்.

More News

Read more about: yercaud tamilnadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+