துல்ஜாபூர் பவானி கோயிலுக்கு அருகிலேயே இந்த சிந்தாமணி கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சிந்தாமணி தெய்வம் தன் பக்தர்களுக்கு சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் உதவி செய்வதாக நம்பப்படுகிறது.இந்த கோயிலின் கட்டமைப்பு ஒரு வட்ட வடிவப்பாறை போன்று காணப்படுகிறது.
இங்கு ஒரு அலங்காரப்பல்லக்கு ஒன்று பல்வித ஓவியங்களைக்கொண்டதாய் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் ஊர்வலமாய் எடுத்துச்செல்வதற்கென்றே வைக்கப்பட்டுள்ளது. மங்கல நாட்களில் இங்கு பெருமளவில் பக்தர்களும் பார்வையாளர்களும் கூடுகின்றனர்.
இந்த கோயிலுக்கு அருகிலேயே கண்டோபா, மதாங்கி, யமாய் தேவி மற்றும் நரசிம்மா போன்ற தெய்வங்களுக்கான கோயில்களும் காணப்படுகின்றன.