கோவில் நகரமான உஜ்ஜைன்னின் வரலாற்றுச் சின்னமாக கருதப்படுகிறது கலியதே அரண்மனை. இது மண்டு சுல்தான் என்பவரால் கி.பி.1458-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அரண்மனை ஷிப்ரா நதியின் நடுவில், ஒரு தீவில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
பின்டாரிஸ் காலத்தில் இந்த அரண்மனை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. பின்னர் 1920-ஆம் ஆண்டு ஸ்ரீ மாதவ் ராவ் ஸ்கிண்டியா என்பவரால் இது மீண்டும் எழுப்பப்பட்டது. சிறந்த கட்டடக் கலையை கொண்ட இந்த அரண்மனையின் மைய அறை பெர்சியன் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அக்பர் மற்றும் ஜஹாங்கிர் இங்கு வந்தது இரண்டு பெர்சியன் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச சுற்றுலா அமைச்சகத்தின் படி, அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் ஒரு இடமாக விளங்குகிறது இந்த அரண்மனை. அரண்மனைக்கு இரண்டு பக்கத்தில் இருந்தும் ஷிப்ரா நதி ஓடுவதால் இதனை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications