காளிதாஸ் கல்விக்கழகம் 1978-ஆம் வருடம் கோவில் நகரமான உஜ்ஜைன்னில் மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் கட்டப்பட்ட பன்முக ஒழுக்க நிறுவனமாகும். இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நபராக கருதப்படுபவர் கவி காளிதாசர்.
அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் இந்த நிறுவனம் எழுப்பப்பட்டது. அந்த கவியின் நினைவு மக்களிடையே நீங்காமல் இருக்க வேண்டும் என்பது தான் அரசாங்கத்தின் குறிக்கோள். சமஸ்கிருதம் படிக்கவும் ஆராயவும் மிகவும் சிறந்த மையங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
மேலும் இந்த நிறுவனத்தின் நோக்கம் காளிதாசருடைய இலக்கியங்களை கல்வி முனையில் இருந்து மட்டும் பாராமல் ஒழுக்க கோணத்தில் இருந்தும் பார்ப்பதும் தான். காளிதாசருடைய இலக்கியங்களை மொழிபெயர்த்து ஆவணமாக்கப்பட்டுள்ளன.
அவைகள் அண்டை நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கல்விக்கழகம் இங்கு பல கருத்தரங்குகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை அடிக்கடி நடைபெறச் செய்யும்.