இயற்கையான சுண்ணாம்பு பாறைகளால் ஆன இந்த குகை, உள்ளூர் மக்களால் `ஹங்ஹுய் மங்க்சோர்' என அழைக்கப்படுகிறது. இது தொல்பொருள் துறையில் விருப்பமுடையவர்கள் கண்டிப்பாக காணவேண்டிய ஒரு முக்கியமான இடமாகும்.
இந்த குகை இந்தியாவின் மிக பழமையான தொல்பொருள் குகைகளில் ஒன்றாகும். உக்ருள் கிராமத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் `ஹங்ஹுய்' என்கிற டங்க்ஹுல் நாகா கிராமத்தில் இந்த குகை அமைந்துள்ளது.
இங்கு `சாத்தான் தர்பார் மண்டபம்' என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் சாத்தான் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
அது தனது இரண்டு மனைவிகளுடன் பகிர்ந்து கொண்ட அதனது படுக்கையறை, குகையின் வட பகுதியில் உள்ளது. இரண்டு மனைவிகளுக்கும் தனித்தனியாக இரண்டு அறைகள் இருந்தன. ஆக மொத்தம், குகையில் ஐந்து சுரங்கங்கள் அமைந்திருக்கின்றன.
இந்த குகை கற்காலத்தை சேர்ந்தது. இங்கு கற்காலத்தை சேர்ந்த பல அரிய தொல்பொருள்கள் காணப்படுகின்றன. இரண்டாம் உலக போரின் போது, இந்த குகை உள்ளூர் மக்களால் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது.



Click it and Unblock the Notifications