ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள உணா மாவட்டத்தில் ஹோசியார்பூர்-தரம்சாலா சாலையில் அமைந்துள்ள பெருமைமிக்க வழிபாட்டுத்தலம் ஷிவா பாரி ஆகும். சுவான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த இடத்தில் தான் குரு துரோணாச்சாரியாவின் சீடர்கள் வில்வித்தைப் பயிற்சிகளை எடுத்ததாக புராணக்கதைகளும் உண்டு.
குரு துரோணாச்சாரியா தனது மகள் ஜயதி என்பவர் சிவபெருமானை வழிபட வேண்டி இந்த தலத்தை உருவாக்கியதாக மற்றொரு புராணக்கதையும் கூறுகிறது. ஜீலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பக்தர்கள் பெருமளவில் இந்த கோவிலுக்கு வருகை புரிந்து தங்களுடைய வேண்டுதல்களை கடவுளிடம் முறையிடுகின்றனர்.



Click it and Unblock the Notifications