வால்ப்பாறையின் பரந்தவெளியில் ஆச்சரியமூட்டும் அம்சமாக அன்னை வேளாங்கன்னி ஆலயம் திகழ்கின்றது. வால்ப்பாறையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இவ்வாலயம், 2003 ஆம் ஆண்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டது.
ஆண்டுத் திருவிழா நிகழும் செப்டம்பர் மாதமே இந்த ஆலயத்தை பார்வையிட சிறந்த காலம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த திருவிழா உள்ளூரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் இது அதிக ஆடம்பரமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆலயம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் அமைதியான அழகை உணர்வதற்காக தினந்தோறும் பல பயணிகள் இங்கே வருகின்றார்கள். தியானத்திற்கு இந்த அமைப்பு மிகவும் கச்சிதமானது, பயத்தையும், அழுத்தத்தையும் உங்கள் மனதை விட்டு நீக்க இது சிறப்பான இடம்.