அம்ரிதி விலங்கியல் பூங்கா எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலமானது அம்ரிதி ஆற்றுக்கு அப்பால் தெள்ளாய் எனும் இடத்தில் உள்ள ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ளது.
இங்கு அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் பலவகையான விலங்கினங்கள் மற்றும் தாவரவகைகளை பார்த்து ரசிக்க முடியும். குரங்கு, புள்ளிமான், முள்ளம்பன்றி, நரி, மயில், வாத்து, காட்டுக்கிளி, முதலை, காட்டுப்பூனை மற்றும் வல்லூறு போன்ற பல உயிரினங்கள் இந்த வனப்பகுதியில் வசிக்கின்றன.
மேலும் பல அரியவகை மூலிகைச்செடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றையும் இங்கு காணலாம். இந்த சுற்றுலாத்தலத்தில் இரண்டு ஓய்வு இல்லங்கள் மற்றும் ஒரு குழந்தைகள் பூங்கா ஆகியவற்றோடு ஒரு தியான மண்டபமும் உள்ளது.
விடுமுறைக்காலத்தில் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். சமீப காலமாக பிரசித்தி பெற துவங்கியுள்ள இந்த சுற்றுலாத்த்திற்காக பல புதிய முயற்சிகளை தற்போது மாநில அரசாங்கம் எடுத்து வருகிறது.
இந்த வனப்பகுதிக்குள் நுழைய கட்டணமாக 2 ரூ வசூலிக்கப்படுகிறது. இந்த வனப்பகுதியில் பூர்வகுடி வம்சத்தினர் வசித்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இவர்களது முன்னேற்றத்திற்காக நிம்மியாம்பட்டு எனும் கிராமத்தில் ஒரு ஆதிவாசி நலச்சங்கமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications